என் மலர்tooltip icon

    ஈரோடு

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர டாரஸ் லாரிகளுக்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வியாபாரிகள், லாரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    சத்யமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரவு நேரம் மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர டாரஸ் லாரிகளுக்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வியாபாரிகள், லாரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சத்தியமங்கலம் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சாலை வழியாக இரவு நேரம் வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் வணிகர் சங்கம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்கு வரத்தை தடை குறித்து கருத்து கேட்கப்பட்டது.

    இதன்படி நாளை(திங்கட்கிழமை) சத்தியமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள், அனைத்து கட்சியினர் , வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப் பட்டது.

    இதன்படி நாளை சத்தியமங்கலம் பகுதி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுகிறது. நாளை முழு கடை அடைப்பு காரணமாக பல கோடி வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் சத்தியமங்கலம் சோதனை சாவடி அருகே நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதேப்போல் மாவட்டம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் தாளவாடியில் விவசாய சங்க தலைவர் கண்ணையன், திம்பம் மலைப்பாதை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் யுவபாரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விவசாயிகள் வணிகர்கள் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். திம்பம் மலைப்பாதை தடையை முழுமையாக நீக்க வலியு றுத்தி சத்தியமங்கலத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது . அதற்கு ஆதரவு தெரிவித்து தாளவாடி மலைப்பகுதி முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.

    ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்வர். 

    ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த விரதம் நிறைவு பெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்ள தொடங்கினர்.

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள். 

    அதன்படி ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.

    இந்த ஊர்வலம் பன்னீர்செல்வம் பார்க் அருகில் தொடங்கி தேவால யத்தில் நிறை வடைந்தது.

    இதேபோல், சி.எஸ்.ஐ சர்ச்சில் குருத்தோலை ஊர்வலம் ஆலயத்தில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக வந்து ஆலயத்தில் நிறைவடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடிய படி சென்றனர்.

    இதையடுத்து வரும் 14-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான  15-ந்  தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

    இதேபோல் அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு இடங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர். ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.  முன்னிலையில்,  அமைச்சர் சு.முத்துசாமி ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத் தின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், ரூ.45.65 லட்சம் மதிப்பீட்டில் 12 பணிகளும், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் 16 பணிகளும், ரூ.38.55 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும் என மொத்தம் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் 34 பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட் பட்ட முருகன் புதூர் பகுதியில் உள்ள நக ராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்விநிதித்திட்டத்தின் கீழ் ரூ.20 லட் சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டிடத்தினையும், கமலா ரைஸ் மில் வீதியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம் தண்ணீர் வழங்கும் சேவையினையும் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, கோபிசெட்டிபாளையம்  நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபி தாசில்தார் தியாகராஜன், கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தமிழக அரசே, தமிழக அரசே வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தாக்கிய வடமாநிலத்தவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயூர் கபீர், வெற்றிக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

    தமிழக அரசே, தமிழக அரசே வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னுரிமை கொடு, முன்னுரிமை கொடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடு. தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்து என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதிர் மாவட்டச் செயலாளர்கள் லோகு பிரகஷ், தாமோதரன், சந்திரசேகர் சுப்புசாமி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் ஆண் நண்பருடன் வந்த இளம்பெண் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகன் விஜய் (24). இவர் சென்னை ஒரகடம் பகுயில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே கம்பெனியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பவித்ரா (23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விஜய் கோவையில் உள்ள தனது அக்காவை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் பவித்ராவும் உடன் வந்தார். விடிய, விடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததால் விஜய் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரோட்டின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்தானது.

    இதில் படுகாயமடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த விஜயையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து பலியான பவித்ராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தை விட்டு ரெயில் செல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த ரெயில் திடீரென நின்றது. உடனே என்னவோ ஏதோ வென்று பதறி அடித்துக் கொண்டு போலீசார் அந்த ரெயிலை நோக்கி ஓடினர்.

    ஈரோடு:

    கோவையில் இருந்து இன்று காலை மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது. பின்னர் 8.50 மணிக்கு மீண்டும் ஈரோட்டில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது.

    ரெயில் நிலையத்தை விட்டு ரெயில் செல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த ரெயில் திடீரென நின்றது. உடனே என்னவோ ஏதோ வென்று பதறி அடித்துக் கொண்டு போலீசார் அந்த ரெயிலை நோக்கி ஓடினர்.

    அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது தெரியவந்தது.

    இது குறித்து அந்த பெண்ணிடம் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தபோது, நானும் எனது மகளும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம். எனது மகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் தின்பண்டம் வாங்க இறங்கி சென்றார். ஆனால் அவர் வருவதற்குள் ரெயில் கிளம்பி விட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினேன் என்றார்.

    ரெயில் நின்றதும் அவரது மகள் மற்றும் சில பயணிகள் ரெயிலில் ஏறினார். பின்னர் ரெயில்வே போலீசார் அந்தப் பெண்ணின் முகவரி செல்போன் போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ரெயிலை நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பஸ்சை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    ஈரோடு:

    சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை ராசிபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து அடைந்தது.

    பின்னர் பஸ் ஈரோட்டில் பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டது. பஸ் ஈரோடு திண்டல் அருகே காலை 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது டிரைவர் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார்.

    பஸ் திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் என்ன ஏதுவென்று தெரியாமல் கூச்சல் போடத் தொடங்கினர். அப்போதும் சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் பழனிச்சாமி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பஸ்சை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலியால் துடித்த பஸ் டிரைவர் பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த பகுதி வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வந்தார். அப்போது அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    அங்குள்ள ஒரு போலீஸ்காரரை அழைத்து பஸ்சை எடுத்து சாலை ஓரமாக நிறுத்த சொன்னார்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 41 போலீஸ் நிலையங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 41 போலீஸ் நிலையங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தமிழக காவல்துறையினர் தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.

    மேலும் காவல்துறையின் கட்டிட அலுவலகங்கள், நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த இடங்களையும் தூய்மைப்படுத்தம் பணியை செய்ய வேண்டும். 

    இதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இதை சரியாக நடைபெறுகிறதா? என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்ய வேண்டும். 

    இந்த பூமி பணிகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார், அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தூய்மை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு டவுன் சப்&டிவி-சனில் டவுன், கருங்கல்-பாளையம், சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, வீரப்பன்சத்திரம், ஈரோடு மகளிர் போலீசார் ஆகிய போலீஸ் நிலையங்களும்,

     பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் மாவட்டம் முழுவதும் 41  போலீஸ் நிலையங்களும், போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் கட்டிடங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.  

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் நேரடிப் பார்வையில் சுத்தப்படுத்தப்பட்டது. இதேபோல் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதியும்  தூய்மைப்படுத்தப்பட்டன.

    கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி முன்னிலையில் சுத்தப்படுத்தப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு லாரியில் ஏற்றி செல்லப்பட்டன.

    இதேபோல் சிறுவளூர், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. 

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
    ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர், புளியம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர், புளியம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக  கஞ்சா வேட்டை 2.0  என்ற பெயரில் போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருட்கள்  விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
     
    மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்-டுள்ளனர்.  இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கஞ்சா விற்றவர்களை  போலீசார் கைது செய்தனர்.

    கடத்தூர் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது  அரச்சலூர்-நம்பியூர் ரோடு வழியாக ஈ.செட்டிபாளையம்  கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் கரைப்பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திக்கொண்டு 5 நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

     விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (25), நம்பியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ராஜா (37), ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (22), ஈ.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த புலி என்கிற ரவீந்திரன் (20), நம்பியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) என தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    மேலும் ரூ.55 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கர்நாடகாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் புளியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (71) என்ற  முதியவர் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக முருகானந்தம் (43) என்பவரை கைது செய்தனர்.
    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பவானி:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இருந்தது.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இனால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி  நந்தி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவில் முன்பு கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி இன்று சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று காலை சங்கமேஸ்வரருக்கு அபி ஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதையொட்டி 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நடக்கிறது. வரும் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை ஆதிகேசவ பெருமாள்  தேர் திருவிழாவும், 16-ந் தேதி சங்கமேஸ்வரர்   தேர் திருவிழாவும் நடக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    வரும் 17-ந் தேதி மாலை பரிவேட்டை நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 18-ந் தேதி தீர்த்தவாரியும், 19-ந் தேதி நடராஜர் தரிசனம், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
    சிவகிரி அருகே தாய் கண் முன்னே கிணற்றி தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சிவகிரி அருகே தாய் கண் முன்னே கிணற்றி தவறி விழுந்து  சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48). இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    சக்திவேல் ஊர் ஊராக குடும்பத்தினருடன் சென்று கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் தனது மனைவி, கடைசி மகள் பழனியம்மாள் (16) மற்றும் தனது ஊரை சேர்ந்த 25 நபர்களுடன் ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த கந்தசாமி பாளையம் பகுதிக்கு வந்து தங்கி அங்குள்ள ஆலைக்கு கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இதற்காக அவர் குடும்பத் தினருடன் அங்கேயே தங்கி இருந்து வந்தார். சம்பவத் தன்று அந்த பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை முடித்துக்கொண்டு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தார். 

    குடிக்க தண்ணீர் எடுக்க வேண்டி பழனியம் மாள் அவரது தாயுடன் நாசுவன் காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றுக்கு வந்தனர்.

    பழனியம்மாள் தனது தாயுடன் சேர்ந்து கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மண் சறுக்கி அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

    தன் கண் முன்னே மகள் கிணற்றில் விழுவதை கண்டு அவரது தாய்  அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் பழனியம்மாள் கிணற்றுக்குள்  மூழ்கி விட்டார்.

    இது குறித்து சிவகிரி போலீசாருக்கும்,  கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேர  போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பிணமாக மீட்டனர். சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடும் குடிபோதையில் சுமார் ஒரு மணி நேரம் பண்ணாரி சோதனை சாவடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சோதனைச்சாவடி அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் படுத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதைக்கண்ட சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் சாலையில் படுத்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த வாலிபரை அப்புறப்படுத்தினர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்க முற்பட்டதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசுவது போல் ரகளையில் ஈடுபட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வடமாநில வாலிபர் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் தன்னுடன் பண்ணாரி கோவிலுக்கு வந்ததாகவும், நாங்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருவதாகவும், ரகளையில் ஈடுபட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் அந்த வாலிபருடன் அவரை அனுப்பி வைத்தனர். 
    ×