என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலீசாரை தாக்கிய வடமாநிலத்தவர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
    X
    போலீசாரை தாக்கிய வடமாநிலத்தவர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

    நாம் தமிழர் கட்சி சார்பில் போலீசாரை தாக்கிய வடமாநிலத்தினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    தமிழக அரசே, தமிழக அரசே வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தாக்கிய வடமாநிலத்தவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயூர் கபீர், வெற்றிக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

    தமிழக அரசே, தமிழக அரசே வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னுரிமை கொடு, முன்னுரிமை கொடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடு. தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்து என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதிர் மாவட்டச் செயலாளர்கள் லோகு பிரகஷ், தாமோதரன், சந்திரசேகர் சுப்புசாமி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×