என் மலர்
ஈரோடு
- அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சின்ன மாரப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் குமரன் கோவில் ரோடு பள்ளத்துமேடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கே அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த பெரிய கொடிவேரி வேட்டுவனபுதூர் பகுதியை சேர்ந்த சின்ன மாரப்பன் (58) என்பவரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை தொடங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஆர்.டி.ஓ.வுக்கு மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நடத்து வதற்கு மனு கொடுத்தார்கள்.
இதனையடுத்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் உஷாராணி மற்றும் வருவாய் துறையினர், இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு பொதுமக்கள் இடையே ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் கூறுகையில், ஆய்வின் முடிவுகளை கலெக்டருக்கு அனுப்பப்படும். அவரது அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- பவானி போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வில் பவானி வட்டாரத்தில் உள்ள பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட வழக்கு கோப்புகளையும் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது.
பவானி:
பவானி போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பவானி வட்டாரத்தில் உள்ள பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட வழக்கு கோப்புகளையும் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வை முடித்தபின் டி.ஐ.ஜி முத்துச்சாமி நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றிட டி.ஐ.ஜி. முதல் காவலர் வரை பாடுபட்டு வருகிறோம்.
அதேபோல் மிகப் பெரிய அளவில் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா வழக்கு பதியப்பட்டு மாவட்டம் தோறும் தினசரி கஞ்சா விற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.
- அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் அந்த பகுதியில் உரக் கடை வைத்து நடத்தி வரு கிறார். இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் வங்கி பாஸ் புக், செக் புக் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து சுந்தரமூர்த்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடு பட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுபாஷ் கடைக்கு 10 வயது சிறுமி உணவு வாங்க அடிக்கடி வந்துள்ளார்.
- சுபாஷ் பார்வை சிறுமி மீது விழுந்தது.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடை மேட்டை சேர்ந்தவர் சுபாஷ் (35). அதே பகுதியில் தள்ளுவண்டியில் சைவ, அசைவ உணவு கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு 10 வயது சிறுமி உணவு வாங்க அடிக்கடி வந்துள்ளார். இதனால் சுபாஷ் பார்வை சிறுமி மீது விழுந்தது. சம்பவத்தன்று அந்த சிறுமி கடைக்கு உணவு வாங்க வந்திருந்தார். அப்போது சுபாஷ் சிறுமிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் சுபாஷ் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுபாஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
- இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை:
ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நாகப்பன், கட்டடத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது கூலி மற்றும் போனஸ் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட 3 ஆண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது.
ஆகவே இந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வாழ்க்கை செலவுகள் கணிசமாக அதிகரி த்துள்ளதை கருத்தில் கொண்டு பின்வரும் கோரி க்கைகளை முன்வை ப்பதென ஏகமனதாக முடிவு செய்ய ப்பட்டது.
அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021, 2022-ம் ஆண்டுக்கான போனசாக அவர்கள் ஈட்டிய கூலியில் 25 சதவீதம் வழங்க வேண்டும். கூலி உயர்வாக தற்போது பெற்று வரும் கூலியில் 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கை கள் மீது உடன டியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்க வேண்டும் என சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சஙகத்தை பேரவை கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12-ந் ேததி மாலை 4 மணிக்கு சென்னிமலையில் கோரிக்கை பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது.
சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோடு சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 12-ந் தேதி மதியத்திற்கு மேல் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு அனைத்து தொழிலாளர்களும், பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
- தாளவாடி அருகே பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
- சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கணேச புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (54) விவசாயி. இவர் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். பின்னர் மாலை மாடுகளை வீட்டிக்கு அழைத்துவர சென்றார். அப்போது தனது பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
இதனையடுத்து இது குறித்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.
- மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
பிரபு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ப்ளூ மெட்டல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பிரபு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது.
- இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பின்னர் மதியம் 12 மணியளவில் சாமி வீதி உலா நடந்தது.
ரங்சாமி, மல்லி கார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் வைக்கபட்டு திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு தெப்ப திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை அடைந்தது.
பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குளத்தின் நடுபகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கபட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது.
குளத்தின் கரையில் பக்தர்கள் நின்று தெப்ப திருவிழாவை கொண்டாடினர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர் பக்தர்கள் சாமிக்கு பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.
தெப்பதிருவிழாவிற்கு தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்ட காஜனூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது.
- இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.
இந்த கழிவு நீர் வடிகாலில் கடந்த மாதம் 12-ந் தேதி எருமை மாடு ஒன்று விழுந்தது. அதனை உரிய நேரத்தில் மாட்டின் உரிமையாளர் இருந்ததால் உயிருடன் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது. இதனை மீட்க முடியாமல் மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார்.
அக்கம் பக்கத்தின் உள்ளவர்கள் உதவியோடு கயிற்றின் மூலம் பாதுகாப்பான முறையில் கட்டி மேலே மீட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு நாங்கள் வருவதற்கு மிகவும் அச்சத்தோடும், ஒருவித பயத்தோடுமே வர வேண்டி உள்ளது. புதியதாக இந்த பகுதிக்கு இரவு நேரத்தில் வருபவர்கள் யாரேனும் இந்த கழிவுநீரில் விழுந்து விடுவார்களோ? என்ற பயம் எங்களுக்குள் இருந்து வருகிறது.
ஆகவே இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
பவானி:
ஈரோடு சம்பத் நகர் அருணாச்சலம் வீதி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர் வேளாண்மைத்துறையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் காரில் நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது திடீரென கார் சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இடிப்பாடிகளில் சிக்கி இறந்த ஜெயக்குமார் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சக்திவேல் ரோட்டில் விழுந்தார்.
- இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், செங்காளிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று சக்திவேல் காஞ்சிக்கோவிலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு செங்காளி பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.
இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






