search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after falling from"

    • காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சக்திவேல் ரோட்டில் விழுந்தார்.
    • இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், செங்காளிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று சக்திவேல் காஞ்சிக்கோவிலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு செங்காளி பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

    இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை மஜீத் வீதியை சேர்ந்தவர் சலீம். இவர் பெருந்துறை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈரோட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சலீம் மற்றம் பேகம் இருவரும் ஈரோடு சென்று விட்டு பின்னர் பெருந்துறை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். உடனடியாக சலீம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×