என் மலர்
ஈரோடு
- கடந்த 10-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
- வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
- பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
அப்போது அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தேசிய தலைவராக இருக்கும் அபி ஆழ்வார் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.
அப்போது அவரது கழுத்தில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து கழுத்தில் பணம் மாலையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அபி ஆழ்வார் கூறும்போது, இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது. பொதுமக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதிக்கக்கூடாது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
தற்போது 52-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
- நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. ஆனால் அதே சமயம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதில் அரசு விடுமுறை நீங்கலாக கடந்த 10-ந்தேதி, 13-ந்தேதி, 17-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கட்சியினருடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஈரோடு அரசு மருத்துவமனை தேர்தல் பணிமனையிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மேலும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் அறிவிக்கப்படுகிறது.
வருகிற பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து 8-ந்தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 96 வேட்பாளர்கள் 121 வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 38 மனுக்கள் தள்ளுபடி ஆகி 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு 77 பேர் களத்தில் இருந்தனர்.
ஆனால் இந்த முறை முக்கிய எதிர் கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை புறக்கணித்து உள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுபோக ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த ஒரு பரபரப்பு இன்றி உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.
தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து தி.மு.க.வினர், அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாகச் சென்று தி.மு.க.வின் மக்கள் திட்டங்களை கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதைப்போல் விசைத்தறி கூடங்களுக்கு நேரடியாக சென்று நெசவாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதைப் போல் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இனி வரக்கூடிய நாட்களில் மற்ற அமைச்சர்கள் பிரசா ரம் மேற்கொள்ள உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
- வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
- வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும். கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாமரைக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டுயானை ஒன்று சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும், சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் சாலையில் உலாவருவதாகவும் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வரும் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்.
மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும், வனப்பகுதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து வனத்துறையினர் வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
எனவே வாகனத்தில் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்போடும் செல்ல வேண்டும். மேலும் அங்கே சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.
- நாளை (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
- வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.
அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
இன்று கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா்.
- இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த காரில் சோதனை செய்தபோது, காரில் ரூ.2.20 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளாவை சேர்ந்த முனீர் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடு வாங்க பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். ஒரே நாளில் 2 வியாபாரிகளிடம் பறக்கும் படையினர் ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்திருப்பது வெளிமாநில மாட்டு வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் மீன் கிணறு, சின்ன மூப்பன் வீதியைச் சேர்ந்தவர் தன சேகர் (வயது 36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். வந்தனா 5-ம் வகுப்பும், மோனீஸ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோவிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
தனசேகர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். வந்தனா, மோனீஸ் இருவரும் குடித்த போது கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர்.
அதற்குள் தனசேகரனும், பாலமணியும் விஷம் குடித்து உயிருக்கு போராடினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். நான்கு பேரையும் மீட்டு பெருந்துறை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே, தனசேகரனும் பாலமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் வந்தனாகவும், மோனீசும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் வந்தனா, மோனீஸ் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், திருநங்கை வாக்காளர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இடைத்தேர்தலையொட்டி இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்கள் அதிகம் உள்ள பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி ஆகிய 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
- நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
- அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.
அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
- உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பறக்கும் படை, சோதனைச்சாவடி, நிலையான கண்காணிப்பு படையினரின் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் தினசரி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை வரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை பகுதியான பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி என்.சதீஸ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ரூ.1 லட்சம் சிக்கியது.
விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த தபஸ் மந்தல் என்பது தெரியவந்தது. பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் ரூ.1 லட்சத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
- நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
- இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க-பா.ஜ.க தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு தேர்தல் களம் கடந்த முறை போன்று பரபரப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் நகர் பகுதி, கள்ளுக்கடை மேடு, ஓடைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று எஸ்.கே.சி ரோடு, மாமலை வீதி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
- நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.
இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் வீடு வீடாக சென்று வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.






