என் மலர்
ஈரோடு
- கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்படுகிறது.
இங்கு கடந்த 7-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறையில் உள்ள அவரது வீடு, அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் என்.ஆர். கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரகுநாயக்கன்பாளையத்தில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இன்று ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
- வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 13, 17-ந் தேதிகளில் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.
இதையடுத்து 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
முதல் நபராக தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
நான் இதுவரை 246 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது 247-வது தேர்தலாகும்.
நான் இதுவரை 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் என போட்டிட்டு உள்ளேன்.
வாஜ்பாய், நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, சினிமா நடிகர் சரத்குமார் என பலரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
கடைசியாக கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 286 வாக்குகள் பெற்றேன். தமிழகத்தில் கடைசியாக விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன்.
கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை போட்டிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.
இன்னும் இந்தியாவில் எத்தனை தேர்தல் வந்தாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்த லிலும் போட்டியிடுவேன்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து அதற்காக பிரசாரம் எல்லாம் செய்ய மாட்டேன். எனது நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மதியம் வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடமிருந்து, தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் படிவம், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் டெபாசிட்தொகை ஆகியவற்றை சரி பார்த்தனர்.
அதன்பின்னர், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நடைமுறைகள் முழுவதும் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.
மேலும், வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் மற்றும் வளாகம் முழுவதும், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்கு மரன், இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.
18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு
- மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டா டும் வகையில் ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள 172 கூட்டுறவு சங்கத்தின் கீழ் 878 முழு நேர ரேசன் கடைகள், 355 பகுதிநேர கடைகள் என 1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை.
- இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சங்ககிரி பெருமாள்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் என தெரியவந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசியல் கட்சியினர் ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளில் இப்போதே ஈடுபட தொடங்கி விட்டனர்.
- தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.
18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேட்பாளர் யார் என்பது இன்று முடிவாகி விடும் என தெரிகிறது.
ஈரோடு தொகுதியை பொறுத்தவரை இருமுறை காங்கிரஸ் வேட்பாளர்களே போட்டியிட்டனர். அதனால் இந்த முறை யார் வேட்பாளர்? என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க. கூட்டணி உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளில் இப்போதே ஈடுபட தொடங்கி விட்டனர்.
தி.மு.க. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டுக்கு 29-ந்தேதி சென்றுவிட வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து தி.மு.க.வினர் ஒவ்வொரு வரும் ஈரோட்டில் ஏற்கனவே தங்கிய ஓட்டல்களில் இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் பலர் கடந்த முறை அங்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இப்போது அதே வீடுகளை மீண்டும் வாடகைக்கு கேட்டுள்ளனர்.
இப்போது பொங்கல் பண்டிகைக்காக அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பேண்ட்-சட்டை, வேஷ்டி, சேலை, காலண்டர் வழங்கி வருகிறார்கள்.
பொங்கலுக்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் தி.மு.க.வினர் 16-ந்தேதி வரை பொங்கல் நிகழ்ச்சியில் தீவிரமாக இருப்பார்கள். அதன்பிறகு ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிப்பார்கள் என்று தி.மு.க. தலைமை கழக நிர்வாகி தெரிவித்தார்.
- ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
- முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறை பகுதியில் உள்ள என்.ராமலிங்கத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும், இவருக்கு சொந்தமான அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இந்த 3 இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி. நிறுவன உரிமையாளர் செல்வசுந்தரம் வீட்டிலும் அதிகாரிகளின் சோதனை நடந்தது. 2-வது நாளாக நேற்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் அலுவலத்தில் சோதனை நடைபெறுகிறது.
கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டது.
இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர்.மணிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் கண்காணிப்பு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பதிவு செய்து அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பது, பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பரிசுகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெறும்.
மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு இங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பறக்கும் படைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவி த்தனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது.
- காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கிற்கு 8 நாட்கள் என்றாலும் பொங்கல் அரசு விடுமுறை நீங்கலாக வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி (திங்கட்கிழமை) 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது.
- வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது. இது தவிர 3 நிலை கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் 10-ந் தேதி முதல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறக்கும் படைக்குழுவில் எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் நிலை அதிகாரி ஒருவர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ஒரு வீடியோ கிராபர் உள்ளனர். தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, காளை மாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மேற்கொண்டார்.
இதில், முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறதா, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறதா, பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை காவலர்கள் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் உறுதி செய்தார். விடிய விடிய இந்த வாகன சோதனை நடைபெற்றது. மேலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது.
- 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன.
இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10-ந் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற்போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. அப்படி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






