என் மலர்
ஈரோடு
- குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பிரவீன்குமார் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் போலீசார் குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் திருமலை தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அக்பர் அலி (55) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்து உள்ளது. உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தயானந்தன் இருந்த வீட்டின் அறை கதவை தட்டி உள்ளனர்.
கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்த போது தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டு தோறும் 15 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
18 வயதிற்கு உட்பட்டோ ருக்கு "கலை இளமணி" விருதும், ரூ.4000 காசோலை யும், 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி" விருதும், ரூ.6000 காசோலையும், 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி" விருதும், ரூ.10,000 காசோலையும், 51 வயது முதல் 65 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி" விருதும், ரூ.15,000 காசோலையும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" விருதும், ரூ.20,000 காசோலையும் வழங்கப்பட உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இசை, நாட்டியம், ஓவியம், நாட்டுப்புற கலைகள், நாடகம், கருவியிசை, சிற்பிகள், கைவினைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்ட கலை ஞர்கள் விருது பெற தங்க ளது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்று களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டு த்துறை மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோவை-641050 என்ற முகவரிக்கு வருகின்ற 29-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரம் வேண்டுவோர் 0422-261029 0 அல்லது 944221 3864 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
- புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
ஈரோடு:
ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு உணவு பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் தற்போது உணவு தொடர்பான பொது மக்களின் புகார் நடவடி க்கைகளை எளிதாக்கும் விதமாக விரைவு நடவடி க்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை டைப் செய்யாமல் மிக எளிதாக விவரங்களை தேர்ந்தெடுக்கு ம் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவா க்கப்பட்ட புதிய இணைய தளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tnfood safety consumer App பதிவிறக்கம் செய்யப்பட்டு ள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்க ளை பொதுமக்கள் இதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், கைபேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
மேலும் புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேர முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை உடனடி யாக எடுக்கப்பட்டு புகார் தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்றார்.
- கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாப்பே ட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள் (55). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
மூத்த மகள் செல்வி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சோலையம்மாளின் தம்பியான பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சிவசக்தி (17) என்ற மகனும், சோபியா (13) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வி அவரது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் சோலையம்மாள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து செல்வி அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
நேற்று சோலையம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீடடு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
- எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது.
- சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. ரோட்டில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு சிவப்பிரகாசம் என்பவர் கூரியர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜர் போட்டு இருந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிய தொடங்கியது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது. பின்னர் இதுகுறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பார்சல்கள் மற்றும் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 12 மின் மோட்டார்களும் தீயில் கருகியது. பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
- விசாரணையில் பூபதி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.
- கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பெரிய சென்ட்ராயன் பாளையம் கிராமம் செங்கரடு வன மாளிகை என்ற பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.
தப்பியோட முயன்ற அந்த நபரை பங்களாப்புதூர் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பூபதி (23) என்பது தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில் பூபதியின் விவசாய பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வன விலங்குகளை வேட்டை யாட உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.
இதனையடுத்து பூபதி வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.
அதேபோன்று டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கொளுஞ்சி காடு தோட்டம் பொன்னம்பலம் என்பவரது கோழிப்பண்ணையில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பொன்னம்பலம் (44) என்பவரது கோழிப்பண்ணைக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் பொன்னம்பலம் கோழிப்பண்ணையில் உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை பங்களாப்புதூர் போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த கூணன் என்பவரது மகன் கருப்புசாமி (26) அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பெரியசாமி (21) ஆகியோர் வன விலங்குகளை வேட்டையாடிவிட்டு துப்பாக்கியை பொன்னம்பலம் கோழிப்ப ண்ணையில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து 3 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் பொன்னம்ப லத்தை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பில் தப்பியோடிய கொங்கர்பா ளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக கைதான 2 பேரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத இதுபோன்ற சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்து கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் பட்சத்தில் இது போன்ற கள்ளத்தனமாக துப்பாக்கிகள் எங்கே தயாராகிறது? யாரிடம்? இருந்து வாங்குகிறார்கள், என்ன விலை? கொடுத்து வாங்குகிறார்கள் என்று இது போன்ற குற்றங்களை தடுக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் என்ன? நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
- பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
- சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.
மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
- தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.
- இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 45). கூலி தொழிலாளி. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (60). தொழிலாளி. இவருக்கும், மாதம்மாளுக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதம்மாளும், கூகலூரை சேர்ந்த அவருடைய 2-வது கணவர் செல்வன் (36) என்பவரும் பொலவக்காளி பாளையம் வந்தனர்.
அப்போது மது போதையில் இருந்த தொழிலாளி செல்வனுக்கும், மாதம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.
இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து செல்வன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
இதை தொடர்ந்து காயம் அடைந்த மாதம்மாள், செல்வன் ஆகிய 2 பேரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய செல்வனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
- இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தர வின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி பங்களாபுதூர் அருகே கொண்டைய ன்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் கொண்ட 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்ப டுவது தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்த போது பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த முருகன் (25), பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தி குமார பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலா ளர்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு 640 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர்.
- பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
- ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி செட்டிபாளையம் என்ற ஊரில் பவானி ஆற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென அந்தியூர்-கோபி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் கோபிசெட்டி பாளையம் இன்ஸ்பெக்டர் அ.சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
- சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை கைலா சநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சித்திரை மாதம் வசந்த காலமாகவும், சித்திரை மாதம் திருவிழாக்கள் நிறைந்த மாதமாகவும் தமிழக கோவில்களில் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டா டப்படுகிறது.
சிறப்பு மிக்க சித்திரை மாதம் வரும் திருவோண நட்சத்திரம் சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
இதையொட்டி சென்னி மலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர் உட்பட 16-க்கும் மேற்பட்ட ேஹாம திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






