search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பிரவீன்குமார் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் போலீசார் குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் திருமலை தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடா்ந்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அக்பர் அலி (55) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×