search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Awards"

    • தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
    • பத்தமடை பரமசிவத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.

    விருது பெறுவோர்:

    திருவள்ளுவர் விருது: தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

    பேரறிஞர் அண்ணா விருது: பத்தமடை பரமசிவம்

    பெருந்தலைவர் காமராசர் விருது: உ.பலராமன்

    மகாகவி பாரதியார் விருது: கவிஞர் பழநிபாரதி

    பாவேந்தர் பாரதிதாசன் விருது: எழுச்சிக் கவிஞர் முத்தரசு

    திரு.வி.க. விருது: ஜெயசீல ஸ்டீபன்

    கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் இரா.கருணாநிதி

    விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டு தோறும் 15 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

    18 வயதிற்கு உட்பட்டோ ருக்கு "கலை இளமணி" விருதும், ரூ.4000 காசோலை யும், 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி" விருதும், ரூ.6000 காசோலையும், 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி" விருதும், ரூ.10,000 காசோலையும், 51 வயது முதல் 65 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி" விருதும், ரூ.15,000 காசோலையும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" விருதும், ரூ.20,000 காசோலையும் வழங்கப்பட உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இசை, நாட்டியம், ஓவியம், நாட்டுப்புற கலைகள், நாடகம், கருவியிசை, சிற்பிகள், கைவினைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு மாவட்ட கலை ஞர்கள் விருது பெற தங்க ளது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்று களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டு த்துறை மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோவை-641050 என்ற முகவரிக்கு வருகின்ற 29-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விவரம் வேண்டுவோர் 0422-261029 0 அல்லது 944221 3864 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது
    • 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கப்படுகிறது

    சென்னை:

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.

    விருது பெறுவோர்:

    திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி

    பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா

    பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி

    பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்

    திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி

    கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா

    பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்

    அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை

    தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.

    இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×