search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
    X

    குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

    • கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அம்மாப்பே ட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள் (55). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    மூத்த மகள் செல்வி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சோலையம்மாளின் தம்பியான பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சிவசக்தி (17) என்ற மகனும், சோபியா (13) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வி அவரது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் சோலையம்மாள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து செல்வி அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று சோலையம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீடடு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    Next Story
    ×