என் மலர்
ஈரோடு
- கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர்.
- தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரு கே உள்ள கணக்கம் பாளை யம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் செல்வராஜ் தனது வீட்டில் கொட்டி கிடந்த கல்லுக்குள் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அச்சமடைந்தார்.
உடனே இது குறித்து கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொட்டி கிடந்த கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் 4½ அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
துரிதமாக செயல்பட்டு நாகப்பாம்பை உயிருடன் மீட்ட முருகேசன், மாதப்பன், முருகன், கோபாலகி ருஷ்ண ன், தேவராஜ், மயி ல்சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி னர்.
- பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
- அணைக்கு வினாடி 1,311 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வரு வதால் அணையின் நீர்ம ட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,311 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம்
அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.76 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
- வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
- ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
தேனி மாவட்ட விவசாயிடம் 2000 ரூபாய் நோட்டு களை தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்த ஏழு பேர் கொண்ட கார் கொள்ளையர்களில் ஏற்கனவே நான்கு பேரை கைது செய்துள்ள மொடக்கு றிச்சி போலீசார், மேலும் நாமக்கல் மாவட்டம் பரம த்தி வேலூர் அருகே பொ த்தனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி 55 என்ற நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த வர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50). என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகினார். சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த வரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டு க்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து உறவினர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்தி ரன் ஆகியோருடன் லக்கா புரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.
இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் வந்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜி உறவினர் செந்தில் ஆகியோருடன் பரிசல் துறையில் இருந்து பெருந்துறைக்கு புறப்ப ட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அரசு அதி காரிகள் என கூறி ரூ.35 லட்சத்தை பறித்து கொண்டு 7 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றனர்.
இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து ஏற்கனவே கரூர் மாவட்டம் நாகம்பள்ளியைச் சேர்ந்த ராஜேந்திரன், சக்தி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன், சின்னதுரை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூ ரை சேர்ந்த மாதேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி (55) என்பவரை நேற்று மொடக்குறிச்சி அருகே உள்ள ஆரியன் காடு பாலம் நுழைவு அருகே வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.
- சரக்கு வாகனம் அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
- தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி அருகே உள்ள வைர மங்கலம் அடுத்த வெங்க மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தவசியம்மாள் (வயது 64).
இவர் இன்றி காலை கவுந்தப்பாடி- பெருந்தலை யூர் ரோட்டில் மாதவன் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் (வேன்) அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் வேனை ஓட்டி வந்த சண்முக வேலன் என்பவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.
கோபி:
விநாயகர் சதூர்த்தி விழா அன்று கோபி காவல் துணைக்கோட்டத்திற்குட்பட்ட கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், நம்பியூர், வரப்பா ளையம், சிறுவலூர், திங்க ளூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில்
இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு களுடன் பொதுமக்களும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து ஒரு வார காலம் வழிபாடு செய்து,
அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு அருகில் உள்ள நீர் நிலை களில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முக வேலு, துரைபா ண்டி, நிர்மலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய சிலைகளை வைக்க கூடாது, ஏற்கனவே சென்ற அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.
மத வழிபாட்டு தளங்கள் முன்பு அமைதி யான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.
அதே போன்று ஊர்வலத்தின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊ ர்வலம் செல்லும் சாலையில் இடையூறு இல்லாமல் பாது காப்பது போன்றவற்றை தெரிவித்தார்.
- ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
- முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
அமைச்சர் சு. முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு திண்ட லில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக கொலை நடந்தது தெரிய வந்தது.
- பீரோவில் எவ்வளவு நகைகள், எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80). இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என திருமணமான 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.
முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். இந்நிலையில் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர்.
சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டினர். இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23) தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டிற்குள் அஜித் சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி. ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி, சாமியாத்தாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறு தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றினர்.
சென்னிமலையில் வயதான தம்பதி வீடு புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இன்று காலை கொலை நடந்த வீட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். மேலும், டி.எஸ்.பி. ஜெயபாலு, இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கைப்பற்றப்பட்ட தடயங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. முதற்கட்டமாக மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை, அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் வளையல்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் எவ்வளவு நகைகள், எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான முத்துசாமி அவரது வீட்டில் பாதுகாப்பிற்காக செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் முத்துசாமியின் வீட்டில் கொள்ளையடிக்க மர்மநபர்கள் திட்டம் திட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முத்துசாமியின் வீட்டில் வளா்த்த நாய்க்கு விஷம் தடவிய பொருளை சாப்பிட கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நேற்று இரவு முத்துசாமி வீட்டிற்குள் நுழைந்து முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு குட்டைக்காடு என்ற பகுதியில் வயதான தம்பதியர்கள் தனியாக வசித்து வந்த நிலையில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து முதியவரை வெட்டி படுகொலை செய்து பணம் நகையை கொள்ளையடித்து சென்றனர். மேலும் மூதாட்டிக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
- சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பூனாட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இதையடுத்து ஒரு வாலிபர் நேற்று பள்ளிக்கு வந்து அந்த மாணவிக்கு தான் மாமா என்று கூறி விட்டு உள்ளே சென்றார். இதை தொடர்ந்து அவர் அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது ஒரு வாலிபர் மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் இன்று காலை அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோடு பூனாட்சி பகுதியில் அந்த தனியார் பள்ளி அருகே ஒன்று திரண்டனர்.
இதைதொடர்ந்து அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டடனர். இதையடுத்து நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பள்ளிக்கு வந்த வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீதும், மாணவியை கடத்தி சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க என கூறினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
- அணைக்கு வினாடி 354 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.
ஈரோடு, செப். 8-
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.94 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 354 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கனஅடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.92 கனஅடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
- அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று மறு குடியமர்வு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர்.
- 497 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியையொட்டி மாயார் அடுத்துள்ள தெங்கு மரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளி யேற்றி மறு குடியமர்வு செய்ய வனத்துறை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பரிந்துரைத்தது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் மறு குடியமர்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மறு குடியமர்வு தொடர்பான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று மறு குடியமர்வு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர்.
அப்போது அவர்கள் வனத்துறை கூடுதல் முதன்மை செயலரிடம் கிராம மக்கள் தங்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி 497 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறினர். ஆய்வின்போது வனத்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சம்பவத்தன்று விஷ மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார்.
- வெள்ளிங்கிரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி பாலப்பாளை யத்தை சேர்ந்தவர் வெள்ளி ங்கிரி (50). ரியல் எஸ்டேட் தரகர். இவருக்கு திருமண மாகவில்லை.
இந்த நிலையில் வெள்ளி ங்கிரி பெருந்துறை அருகே உள்ள திருவேங்கிடம் பாளையம் பெரியார் வீதியில் வசித்து வரும் தனது சகோதரி ஜோதி (48) என்பவரது வீட்டின் அருகில் கடந்த வருடம் புதிதாக வீடு கட்ட ஆரம்பி த்தார்.
இதற்காக வெள்ளிங்கிரி, தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரி கிறது. மேலும் வீடு கட்டு வதற்கு அவருக்கு பணம் கிடைக்காததால் வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று விட்டதாம்.
இதனால் கடந்த 6 மாத காலமாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்த வெள்ளிங்கிரி தான் உயிருடன் இருந்து யாருக்கும் பயனில்லை. எனக்கு திரு மணமும் ஆகவில்லை. என்னால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை என தனது சகோதரியிடம் புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சம்பவத்தன்று விஷ மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார்.அதைக் கண்ட வெள்ளிங்கிரியின் சகோதரி ஜோதியி ன் மகன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளிங்கிரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள செல்போன் கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கவுதம் (29) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.1,200 மதிப்பிலான 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.






