search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி மூதாட்டி பலி
    X

    வேன் மோதி மூதாட்டி பலி

    • சரக்கு வாகனம் அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
    • தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி அருகே உள்ள வைர மங்கலம் அடுத்த வெங்க மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தவசியம்மாள் (வயது 64).

    இவர் இன்றி காலை கவுந்தப்பாடி- பெருந்தலை யூர் ரோட்டில் மாதவன் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் (வேன்) அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் வேனை ஓட்டி வந்த சண்முக வேலன் என்பவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×