என் மலர்
நீங்கள் தேடியது "OLD LADY DIES"
- சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்துள்ளார்.
- பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர், ஊத்துக்குளி ஆர் எஸ் பகுதியை சேர்ந்தவர் சென்னி, இவருடைய மனைவி ராசாள் (55). இவர் சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது ஊத்துக்குளி பகுதியில் ராசாள் இறங்கிய போது ஓட்டுநர் திடீரென பஸ்சை எடுத்துள்ளார்.
இதனால் ராசாள் கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்அவரை சிகிச்சைக்காக ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து அரசு பேருந்து நடத்துனர்கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
- சரக்கு வாகனம் அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
- தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி அருகே உள்ள வைர மங்கலம் அடுத்த வெங்க மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தவசியம்மாள் (வயது 64).
இவர் இன்றி காலை கவுந்தப்பாடி- பெருந்தலை யூர் ரோட்டில் மாதவன் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் (வேன்) அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் வேனை ஓட்டி வந்த சண்முக வேலன் என்பவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
- துக்க காரியத்துக்கு சென்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம்சீகூர் காலனி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கலியம்மாள் (வயது 75). விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கலியம்மாள் நேற்று மதியம் அத்தியூருக்கு துக்க காரியத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அத்தியூரில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அகரம்சீகூர் காலனி தெரு நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துவதற்காக டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தாக கூறப்படுகிறது. அப்போது பஸ்சில் இருந்து இறங்குவதற்காக கலியம்மாள் படிக்கட்டு அருகே வந்த போது நிலைதடுமாறி, பஸ்சில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கலியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."






