search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Another person was arrested in"

    • வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்ட விவசாயிடம் 2000 ரூபாய் நோட்டு களை தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்த ஏழு பேர் கொண்ட கார் கொள்ளையர்களில் ஏற்கனவே நான்கு பேரை கைது செய்துள்ள மொடக்கு றிச்சி போலீசார், மேலும் நாமக்கல் மாவட்டம் பரம த்தி வேலூர் அருகே பொ த்தனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி 55 என்ற நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த வர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50). என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகினார். சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த வரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டு க்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து உறவினர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்தி ரன் ஆகியோருடன் லக்கா புரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.

    இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் வந்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜி உறவினர் செந்தில் ஆகியோருடன் பரிசல் துறையில் இருந்து பெருந்துறைக்கு புறப்ப ட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அரசு அதி காரிகள் என கூறி ரூ.35 லட்சத்தை பறித்து கொண்டு 7 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து ஏற்கனவே கரூர் மாவட்டம் நாகம்பள்ளியைச் சேர்ந்த ராஜேந்திரன், சக்தி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன், சின்னதுரை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூ ரை சேர்ந்த மாதேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி (55) என்பவரை நேற்று மொடக்குறிச்சி அருகே உள்ள ஆரியன் காடு பாலம் நுழைவு அருகே வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    ×