என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை விற்பனை செய்தும் வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்து விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் ஆடுகள் குறித்து தகவல் இல்லை. ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் நம்பியூர் அருகே உள்ள சின்ன கோசணம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையல் கோபி பகுதியில் 3 வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கவின் (19), சிறுவலூர் ரஞ்சித்குமார் (21), கரட்டடிபாளையம் ஹரி பிரசாத் (20) என்பதும், அவர்கள் தனியார் கல்லூரியில் என்ஜனீயரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 3 பேர் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.
    • விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 வரையிலும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சோலார் இரணியன் தெரு வை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருண் (வயது 37). இவர் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி திவ்யா (34). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    அருணிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அடி க்கடி குடித்துவிட்டு வீட்டி ற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் திவ்யா தனது 2 குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அருண் போன் செய்து திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

    ஆனால் அவர் 2 நாள் கழித்து வருவதாக கூறினார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்க னவே இருந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி திவ்யா ஈரோடு தாலுகா போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஈரோடு:

    நல்ல தரமான விதைகள் மட்டுமே நல் விளைச்சலுக்கு ஆதாரம். தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்ற டைய வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், விதைஇருப்பு, விதைக் கொள்முதல் பட்டியல்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை பட்டியல்கள், விலைப்பட்டி யல் பலகை, முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கைகள், விற்பனை அனுமதிச்சான்று நகல்கள், விதை விற்பனை உரிமங்கள் போன்ற அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யபட்டது

    இந்த ஆய்வின் முடிவில் விதைச்சட்டம் 1966 கீழ் வீதிமீறல் காணப்பட்ட காரணத்தால் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,300 கிலோ விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.82,660 ஆகும்.

    இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    விவசாயிகள் விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே விதை களை வாங்க வேண்டும் எனவும், விதைகள் வாங்கும் போது தவறாமல் விற்பனை பட்டி யல் கேட்டு பெறவேண்டும்.

    மேலும் காலாவதி தேதி, விதை குவியல் எண் போன்ற விவரங்கள் கவனித்து வாங்க வேண்டும்.

    மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யால் பரிந்துரைக்ப்பட்ட பருவத்திற்கேற்ற பகுதிக்கேற்ற ரகங்கலையே விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் உடனிருந்தார்.

    • ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 100 பேர் நிரந்த பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் நிரந்த பணியாளக்குக்கு மாத மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கபட்டு வருகிறது.

    ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும்,

    இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாலையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு இன்று தற்காலிக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களா கவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதா கவும், இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
    • தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    நம்பியூர்:

    நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

    நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓசைபட்டி பகுதியில் மண் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசைப்பட்டியில் ஈரோடு மாவட்ட தனி வருவாய் ஆய்வாளர் சாமுவேல் ராஜ் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்த லாரியை ஓசைப்பட்டி என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒரிச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பதும், லாரியில் கிராவல் மண் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் லாரியையும், மணிகண்டனையும் ஆப்ப க்கூடல் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • ஜான்சன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
    • தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஜான்சனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 34). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் வெள்ளோடு அருகே உள்ள தர்மர் நகர் பகுதிக்கு சென்று ள்ளனர்.

    அப்போது அங்குள்ள கிணற்று அருகில் சென்ற பொழுது ஜான்சன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

    சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது தண்ணீரில் தத்தளித்தபடியே மேலே வர முடி யாமல் ஜான்சன் உயிருக்கு போராடியுள்ளார்.

    இதனை பார்த்தவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஜான்சனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    • திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது.
    • வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவை சேர்ந்தவர் பழனி. இந்நிலையில் சம்பவத்தன்று பழனி வீட்டின் உள்ளே படுத்திருந்தார்.

    அப்போது திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    மேலும் விட்டினுள் படுத்திருந்த பழனி உடல் கருகிய நிலை யில் கிடந்து ள்ளார். இதை யடுத்து தீய ணைப்பு வீர ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகி ச்சைக்காக அனுப்பி வை த்தனர்.

    இந்நி லையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கடத்தூ ர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி மங்களகிரி பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    ஈரோடு:

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு அபி ஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொட ர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோ விலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சா மிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவி ல், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சி றப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தி யூர் திருப்பதி பேட்டை பெரு மாள் உள்ளிட்ட கோவில்க ளில் புர ட்டாசி சனிக்கிழ மையை யொட்டி சிறப்பு அல ங்காரத்தில் சாமி பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அ ண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்த ர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிரா யன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெரு மாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவி லில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி களில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்தி ருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமா ளுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
    • விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் பிரசாந்த் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த பிரசாந்த் வேலை நிமர்த்தமாக இன்று காலை ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது கருங்கல்பாளையம் அடுத்துள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லே அவுட் அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் பிராசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததை யொட்டி காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்தில் பெரும்பா லானோர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    இதைபோல் முகூர்த்த நாட்களும் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் விலை கடந்த வாரத்தை விட இன்று அதிகரித்து விற்கப்படுகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ரூ.100-க்கு விற்கப்பட்ட கருப்பு அவரை ஒரு கிலோ இன்று ரூ.130 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்ந்து விற்கப்படுகிறது.

    ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ புடலங்காய் இன்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. ரூ40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    ரூ 40-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.50-60-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.70-க்கும் விற்கப்பட்டது.

    இதை போல் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் இந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பாவைக்காய்-60, முருங்கைக்காய்-60, கொத்த வரங்காய்-30, கேரட்-60-70, பச்சைமிளகாய்-50, பட்டவரை - 70, பழைய இஞ்சி - 270, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்கா யம்-80-90,

    முட்டை கோஸ்-20, காலிங்பிளவர்-40, காளான்-60, உருளைக் கிழங்கு-40-60, தக்காளி-15. கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    ×