search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "zonal office and protested"

    • ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 100 பேர் நிரந்த பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் நிரந்த பணியாளக்குக்கு மாத மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கபட்டு வருகிறது.

    ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும்,

    இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாலையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு இன்று தற்காலிக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களா கவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதா கவும், இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×