search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The sanitation workers"

    • ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 100 பேர் நிரந்த பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் நிரந்த பணியாளக்குக்கு மாத மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கபட்டு வருகிறது.

    ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும்,

    இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாலையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு இன்று தற்காலிக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களா கவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதா கவும், இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
    • பணப்பல ன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறு த்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்குள்ள காவலர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் மாதம் 4 நாள் விடுமுறை வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும். துப்புரவு தொழி லாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கையில் தங்கள் கோரிக்கை அட்டையுடன் கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட தால் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

    ×