search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster rehearsal"

    • கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
    • தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    நம்பியூர்:

    நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

    நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருப்பூர்:

    சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் தீ தடுப்பு பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி கருவிகள் கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-



    பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்த தீ தடுப்பு மற்றும் பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொது மக்களும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மற்றும் குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அதே போல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.

    மேலும் தரை பாலங்களில் தண்ணீர் செல்லும் போது அதை கடப்பதை தவிர்க்க வேண்டும். மற்றும் இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளங்களில் எந்த அளவிற்கு தங்களை பாதுகாத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்து விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் அர்ப்பணிப்புடனும் மற்றும் துரிதகதியிலும் செயல்பட்டு விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின் போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை வழங்குதல், தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பது குறித்த தகவல்களை கூறியதுடன், தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து ஒத்திகையும் நடத்தி காண்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், உதவி ஆணையர் (கலால்) சக்திவேல், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, உதவி அலுவலர் வெங்கட்ராமன், நிலைய அலுவலர்கள் பாஸ்கரன், சண்முகம், தாசில்தார்கள் கனகராஜ் (பேரிடர் மேலாண்மை), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), ராஜகோபால், அம்சவேணி, முருகதாஸ், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    பேரிடர் மேலாண்மை ஒத்திகையின் போது மாடியில் இருந்து விழுந்து இறந்த மாணவி லோகேஸ்வரி அண்ணன் செல்வகுமார் கண்ணீர் மல்க கூறியதாவது-

    எனது தங்கை மாடியில் இருந்து விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    எனது தங்கையின் தோழி பவித்ராவின் தந்தை சக்திவேல் தான் எனது போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் தங்கை மாடியில் இருந்து விழுந்து பலத்த காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    நாங்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போது எனது தங்கை இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது ஆலாந்துறை போலீசில் புகார் செய்து உள்ளோம். எனது தங்கை மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், பயிற்சியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி லோகேஸ்வரி அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். அவர் இறந்த சம்பவம் குடும்பத்தினர் மட்டுமின்றி ஆலாந்துறை பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்த அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் சோகத்துடன் திரண்டு இருந்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    பேரிடர் ஒத்திகையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
    மேலூர்:

    கோவையில் நடந்த பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானார்.

    இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சியின் போது கவனக் குறைவாகவும், விதிமுறைகளை பின்பற்றாததாலும் விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை வைத்துதான் இதுபோன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreStudent #Logeshwari #Udhayakumar
    ×