search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவனக்குறைவாக செயல்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை- அமைச்சர் உதயகுமார் பேட்டி
    X

    கவனக்குறைவாக செயல்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை- அமைச்சர் உதயகுமார் பேட்டி

    பேரிடர் ஒத்திகையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
    மேலூர்:

    கோவையில் நடந்த பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானார்.

    இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சியின் போது கவனக் குறைவாகவும், விதிமுறைகளை பின்பற்றாததாலும் விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை வைத்துதான் இதுபோன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreStudent #Logeshwari #Udhayakumar
    Next Story
    ×