என் மலர்
திண்டுக்கல்
- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
- விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற வுள்ளது.
அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை க்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள்,
பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்க ங்களும் அளிக்கப்பட வுள்ளது.
எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
- சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த மாதம் வரை மழை மற்றும் பனி காரணமாக காய்கறிகள் வரத்து சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறி களுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தை போலவே கேரளாவிற்கும் காய்கறிகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் (கலர் காய்) ரூ.60க்கும், பச்சை கத்தரி ரூ.100க்கும் விற்பனையாகிறது. தக்காளி ஒரு பெட்டி ரூ.400, வெண்டை ஒரு கிலோ ரூ.50, புடலங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, பூசணிக்காய் ரூ.20, அவரை ரூ.80, கொத்தவரக்காய் ரூ.30, முருங்கை ரூ.80, சம்பா பச்சை மிளகாய் ரூ.30, உருண்டை மிளகாய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.60, கருணை க்கிழங்கு ரூ.60, சேனை க்கிழங்கு ரூ.60 என விற்பனையாகிறது.
மார்க்கெட் விலை யிலேயே இந்த நிலவரம் என்றால் சில்லரை க்கடைகளில் இதை விட சற்று கூடுதலாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்து ள்ளனர். சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விைல குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகில் உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனை யொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அய்யர்மடம், கோட்டை மேடு, குரும்ப பட்டி, மினுக்க ம்ப ட்டி, வி.புது க்கோட்ைட, சிக்கு ப்பள்ள ம்புதூர், ேதாப்புபட்டி, குட்டம், ஆசாரிபுதூர்,
சுக்காம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மின் வினி யோகம் இரு க்காது என்று உதவி செய ற்பொறி யாளர் ஆனந்த குமார் தெரி வித்துள்ளார்.
- பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர்.
- பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள நல்லபொம்மன்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் தேவிநாயக்கன்பட்டி மற்றும் காசிபாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றே கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு காலை 8.30 மணிக்கு ஒரு அரசு பஸ் வருகிறது. அந்த பஸ்சில்தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதன் பிறகு பஸ் இல்லாததால் மாலை யில் பள்ளி முடிந்து 5 கி.மீ. தூரம் நடந்தே மாணவர்கள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் 7 மணிக்கு வீட்டிற்கு வரும் மாணவ-மாணவிகள் அதன் பிறகு வீட்டுப்பாடம் கூட எழுத முடியாமல் சோர்வுடன் தூங்கி விடுகின்றனர்.
கடந்த பல ஆண்டு களாகவே இதே சூழல் நிலவி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மினிபஸ் இயக்கப்பட்ட நிலையில் தற்போது காலையில் இயங்கும் ஒரே பஸ் மட்டுமே போக்குவரத்து சேவையாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் மாலையில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நல்ல பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்று விடுகின்ற னர். பஸ் வசதி கேட்டு காந்திராஜன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. ஆகி யோரிடமும் மனு அளித்து ள்ளோம். தற்போது மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு கொடு த்துள்ளோம். பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
- சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
- காட்டுபன்றியை வேட்டையாடி இறைச்சியை கொண்டுவந்த 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் அறிவுறுத்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்- சிறுமலை சாலையில் வனசோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு சம்பவத்தன்று வனக்காப்பாளர்கள் சங்கர், தனலட்சுமி ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது உதவி வனபாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வாகன தணிக்கை நடை பெற்றது.
சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் சிறுமலை பழையூரில் தோட்ட மேற்பார்வையாளராக பணிபுரியும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பெருமாள்(65), திண்டுக்கல் காந்தி கிராமத்தை சேர்ந்த ஜோதிபிரகாஷ்(32) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் ஆய்வு செய்த போது காட்டுபன்றி இறைச்சி இருந்தது. இதனையடுத்து வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் பாண்டி, சரவணன், அப்துல்ரகு மான் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த தோட்ட த்திற்கு பெருமாளை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுபன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட முத்து ராமலிங்கம், சக்திவேல், ரமேஷ், நாட்ராயன், முருகன், பாண்டி, ஜெய ப்பிரகாஷ், கோபிஆனந்த், குமரன் ஆகிய 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் அறிவுறு த்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும்.
- வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் குருவைய்யா. பூ வியாபாரி. இவரது மகன் ரோஷன்(27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் உஷா(31) என்பவருடன் பேஸ்புக்கில் பழகி வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரோஷனின் செல்போனுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து வரவே அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உஷா பேஸ்புக்கில் இருந்த ரோஷனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை தன்னுடன் சேர்ந்து இருப்பது போல போஸ்டர் தயாரித்தார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும் என நிலக்கோட்டை பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்.
மேலும் குருவைய்யா பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கபட்டியை சேர்ந்த சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), திருப்பூர் கூத்தம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேரும் வழிமறித்து ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குருவைய்யா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்ற கமலேஸ்வரி(31), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.
போலீசார் விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.
ஆங்காங்கே சுற்றித்திரியும் நாய்கள் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிடக்கும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு வளர்கின்றன.இது தவிர சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று திரிகின்றன.இதில் சில வெறி நாய்களாக மாறும் போது சாலைகளில் செல்வோர்களை எல்லாம் கடிக்க தொடங்கி விடுகிறது.
இதுஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில்வே நிலையங்களில் பஸ் மற்றும் ரெயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளை நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கின்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் ஒய்.எம்.ஆர். பட்டி, ரவுண்ட் ரோடு, ரெயில்வே காலனி, அனுமந்தநகர், மரியாநாதபுரம், சுப்புராமன் பட்டறை, தென் போஸ்கோ நகர் குள்ளனம்பட்டி, வேடப்பட்டி, நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நாய்கள் வாகன ஓட்டிகளில் செல்வோரை விடாமல் துரத்துகிறது. இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.
அதன்பின் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி எழுந்தருளினார். மாலை 6 மணிக்குமேல் யானை முகசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து வதம் செய்து கடைசியாக சூரபத்மன் சேவலாக மாறுவதை தெரிவிக்கும் விதமாக சேவல் பறக்கவிடப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
- மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரும்பாறை:
பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் மூலையாறு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையானர் கண்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு செல்வம் என்பவர் கடையை திறக்க வந்தார்.
அப்போதுமதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து கடைக்குள் சென்று பார்ந்த போது, அங்கிருந்த ரூ.1,000 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு கட்டக்காமன்பட்டியை சேர்ந்த மதுபான கடை மேற்பார்வையாளர் பெரியசாமி தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
- இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாவட்டத்தில் நடந்த பல்வேறு ஆட்டுச்சந்தைகளில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.
ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், சேவல்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஆட்டுச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த வாரம் கடைகளில் விற்பனை தலைகீழாக மாற்றம் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒருசில கடைகளில் ரூ.1000 அளவுக்கு கூட விற்பனை நடைபெறாததால் வியாபாரிகள் மிகுந்த சோகம்அடைந்தனர். இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலை நீடிக்கும் என்பதால் இறைச்சி வியாபாரிகள் அடுத்த வரும் நாட்களில் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டனர்.
- தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
- கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பல்வேறு சாலைகளில் அனுமதி பெறாத தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் லாஸ்காட்ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள பி.டி.ராஜன் சாலை ஆகிய பகுதிகளிலும் பஸ்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஏரிச்சாலையில் இருந்து வரும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான நெடுஞ்சாலையான அரசு மருத்துவமனை சந்திப்பு சாலையில் உள்ளதங்கும் விடுதிக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் பிரதான நெடுஞ்சாலையிலேயே நிறுத்துவதால் காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் மற்றும் பிற நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மகாராஜா என்கிற தங்கும் விடுதியை வாடகை ஒப்பந்தத்தில் எடுத்துள்ள உரிமையாளர் மற்றும் மேலாளர் போக்குவரத்து நெரிசலை தட்டி கேட்பவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசுவதோடு, நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று மிரட்டுகிற தொனியில் பேசுவதாகவும் நாங்கள் நிறுத்தும் வாகனங்களை அகற்ற சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டி வருவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எத்தனை முறை போலீசார் அங்கு நிறுத்த ப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த தங்கும் விடுதி முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா? கார் பார்க்கிங் வசதி உள்ளதா? என்பதை மாவட்ட காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதுபோன்ற தனியார் ஆக்கிரமிப்பால் மேலும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.
- தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
- இதுகுறித்து டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ.விடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
திருச்செந்தூர் முருகன் கோவில் அர்ச்சகராக பணிபுரிபவர் கண்ணன். இவர் வத்தலக்குண்டுவில் இருந்து கெங்குவார்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்தார்.
ரூ.10 டிக்கெட் எடுத்து பயணித்த கண்ணன் மீண்டும் திரும்பி வரும்போது ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தான் வரும்போது ரூ.10 மட்டுமே கொடுத்ததாகவும், எதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால்அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதனை யடுத்து வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கும் அங்கும் சரியான பதில் கிடைக்க வில்லை என்பதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகனிடம் புகார் அளித்தார்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.






