என் மலர்
திண்டுக்கல்
- 1-ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கொடிப்பட பூஜை நடைபெற்றது.
இதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளிகாமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவாக வருகிற ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் , அதனைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாள் விழாவாக ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாகத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரியதந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமயசொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- இந்த திட்டம் முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.
- இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கு படிப்பாதையை தவிர ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. அதேபோல் கோவிலில் பொது தரிசனம் மட்டுமல்லாது விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகள் உள்ளன. இதன் வழியே முதியோர்கள், குழந்தைகளுடன் வருவோர் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் பிரதான கோவில்களில் "இடைநிறுத்த தரிசனம்" (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வந்துசெல்லும் பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" தொடங்குவது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் கோவில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" திட்டம் தொடங்கினால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.
இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வாறு தரிசனம் செய்வோருக்கு கோவில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது.
- அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு தெற்குதெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(49). தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடித்து தனது வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி சமையல் அறையில் சமையல் செய்தவற்காக பாத்திரங்களை எடுத்தார்.
அப்போது திடீரென 7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது. இதைபார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர். ஆனால் நீண்டநேரமாக சமையல் அறையில் படமெடுத்து ஆடிய கருநாக பாம்பு சுமார் அரைமணிநேரத்திற்கு பின்பு அங்கிருந்து வெளியேறியது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் பாம்பு வெளியேறிச்சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 வாலிபர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- இது குறித்து தாடி க்கொம்பு போலீசார் அவர்களை கைது செய்து வாலிபர்கள் மீது வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு செட்டி நாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் திடீரென இவரை மறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன், தனிப்பி ரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழி ப்பறியில் ஈடுபட்டது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சரண்குமார் (21), முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (21), சூர்யபிரகாஷ் (19) ஆகியோர் என தெரிய வரவே அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்ய ப்பட்ட பணம் மற்றும் டூவீ லரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாடி க்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச லம் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
- கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கொடைக்கானல்:
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடப்பு ஆண்டிற்கான கோடைவிழாவின் தொடக்கவிழா நாளை (26ம் தேதி) அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது.
கோடை விழாவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலைநிகழ்ச்சிகளையும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சமயமூர்த்தி, சுற்றுலா இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்/தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சந்தீப்நந்துாரி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மேலாண்மை இயக்குநர்(டான்ஹோடா) பிருந்தாதேவி ஆகியோர் சிறப்புறையாற்றவுள்ளனர்.
விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை 3 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 28ம் தேதி அன்று பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 30ம் தேதி அன்று படகு போட்டி நிகழ்ச்சியும், 31ம் தேதி அன்று கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் கலைப்பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.
விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளனர். கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
- கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.
கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
- நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி க்கொள்ளலாம் என அவகாசம் அளித்துள்ளனர்.
- ஆனால் தனியார் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கிகளில் ரூ.2000 நோட்டு கொடுத்தால் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும், செப்டம்பர் 30ந் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறு வனத்தில் குமரன் திருநகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் நகை அடகு வைத்துள்ளார். அதனை திருப்புவதற்காக இன்று சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு சென்ற தொகையில் 12 நோட்டுகள் ரூ.2000 இருந்துள்ளது. இதனை தனியார் பைனா ன்ஸ் நிறுவன ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் என்ன செய்வது என அறியாமல் திரும்பி வந்து விட்டார். நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி க்கொள்ளலாம் என அவகாசம் அளித்துள்ளனர். ஆனால் தனியார் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
பெரும்பாறை:
பெரும்பாறை, புல்லா வெளி பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பா ளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது பெரும்பாறை அருகே உள்ள நேர்மலை என்ற பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.
இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சிலர் விளக்கை கட்டி கொண்டு சுற்றித்திரிந்தனர். இதை த்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது 3 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடி னர். இதையடுத்து பிடிபட்ட வர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளரி க்கரையை சேர்ந்த ஜோதி லிங்கம் (வயது 31), மஞ் சள்பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19 ) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைதானவர்க ளிடம் மேல் விசாரணை நடத்தியதில், நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா தனது வாகனத்தில் ஒரு நாட்டு துப்பாக்கியுடன் நத்தம் செந்துறையை சேர்ந்த ராசு என்பவரும் சேர்ந்து வந்த னர். கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகன த்தில் கடத்திச் சென்றனர். நாங்கள் வேட்டை யாடிய வன விலங்குகளை பட்டி வீரன்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்பனை செய்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து மஞ்சள்பரப்பை சேர்ந்த அய்யப்பன், கட்டக்காட்டை சேர்ந்த பால்பாண்டி, ராசு, பாரதிராஜா சுரேஷ் மற்றும் கடமான் இறைச்சியை கடத்திய வாகனம், ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
- சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என எம்.எல்.ஏ. கூறினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எம்.குரும்பபட்டி, முத்து க்காமன்பட்டி, கருத்தாண்டி பட்டி, சென்னஞ்செட்டி பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகை யிட்டு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கோஷமிட்டனர். சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் ராமன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கி ருந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 1-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.
உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.
சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
- தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
- இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.






