என் மலர்
திண்டுக்கல்
- பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
பணம் வைத்து சூதாட்டம் மட்டுமின்றி சேவல்களை களத்தில் விட்டும் சூதாட்டம் நடைபெறுவதாகவும், அதன்படி வேடசந்தூர் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோடாங்கிபட்டி பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரிய வரவே அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமார், செல்வக்குமார், கனகராஜ், பிரபாகரன், ரஞ்சித்குமார், ஆனந்தன், சிவசெல்வன், தளபதி, முத்துச்சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பயணத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சிலர் தப்பி ஓடியதால் அவர்களையும் தேடி வருகின்றனர். கிராமப்புறங்களில் தொடர்ந்து சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதால் பலர் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை இழந்து செல்கின்றனர். மேலும் சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.
எனவே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி இதுபோன்ற சூதாட்டங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும்.
- நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் உலக அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு புதியதாக யோகேஷ்குமார்மீனா மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் வனப்பகுதி சுற்றுலா இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும். மூடப்பட்டுள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி போன்ற பல்வேறு இடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதே போல பேரிஜம் ஏரி பகுதியிலும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.
- திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
- அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளித்து மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே மல்லநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஜக்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22- ஆண்டுகளுக்கு பின்பு இந்தாண்டு கடந்த 17-ந்நேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. பெரியூர்பட்டி பெரியநாயக்கர் ராஜ்குமார் தலைமையிலும், ஊர் நாயக்கர் தங்கபாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. முதல் நாள் தேவராட்டமும், 2-ம் நாள் ஜக்காலம்மனுக்கு கம்பு கொழுக்கட்டை படையல் போட்டு வழிபாடும் நடந்தது.
இந்த திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களின் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான அதில் அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து 14 மந்தைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது.
சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கருத்தநாயக்கர் மந்தை எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளித்து மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 200 சாமி மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல் 2-வது மற்றும் 3-வது வந்த சாமி மாடுகள் கவுரவிக்கப்பட்டது. முன்னதாக திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வை ஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஓடிவந்த மாட்டின் மீது சமூக வழக்கப்படி கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு, எலுமிச்சைப்பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் ஜக்காலம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அனைத்து மந்தையர்களையும் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையுடன் திருவிழா முடிவடைந்தது.
திருவிழாஏற்பாடுகளை கரைபெரியதனக்காரர்கள், கோடாங்கிநாயக்கர்கள், கம்பிளிநாயக்கர்கள், ஊர் நாயக்கர்கள், ஊர் பொதுமக்கள், ராஜ கம்பளத்தார், நாயக்கர்கள் மல்லநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- புகார் தெரிவிக்கப்பட்ட அதே தனியார் பஸ் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் பஸ் நிலையத்தை நோக்கி வரும் போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது
- கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் குறுகிய சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலிலிருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சில தனியார் பஸ்கள் அதிக ஹாரன் ஒலி சத்தத்துடன் அதிவேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை கிராமத்திற்கு செல்லும் தனியார் பஸ் அதிவேகமாக இயக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் புகார் தெரிவிக்கப்பட்ட அதே தனியார் பஸ் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் பஸ் நிலையத்தை நோக்கி வரும் போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணித்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பஸ்கள் கொடைக்கானல் மலைச்சாலைகளில் அடிக்கடி அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்
எனவே அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பயன்படுத்தும் பஸ்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் குறுகிய சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.
- திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
ராமேஸ்வரத்தில் நேற்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்றனர்.
கோவை காந்திபுரம், கணபதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர்கள் திண்டுக்கல் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.
வேனை பிரதாப்(26) என்பவர் ஓட்டி வந்தார். வேகத்தடையில் வேன் ஏறி இறங்கியபோது பின்னால் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. வேனில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். பின்னர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பிரதாப்(26), சின்னத்துரை(35), முருகன்(40), குமார்(35), பார்த்திபன்(28), சந்துரு(16), போசிகன்(17), சிவக்குமார்(40), தினேஷ்குமார்(27), தர்மதுரை(23), மகேஷ்(25), சந்தோஷ், அபி, ராஜேஸ், கணேஷ்குமார் உள்ளிட்ட 16 பேர் படுகாயமடைந்தனர்.
வேன் மீது மோதிய லாரியை ராஜபாளையத்தை சேர்ந்த குமார்(38) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் சங்கரன்கோவிலை சேர்ந்த லாரிஉரிமையாளர் முருகன்(45) என்பவரும் உடன் வந்தார். லாரியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து குஜிலியம்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேரும் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- இந்து முன்னணி அமைப்பினர் சர்ச்சைக்குரிய பேனர் வைக்ககூடாது என தெரிவித்து போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டி ருந்தன.
அதில் ராமர், சீதை படத்தை அவமதிப்பு செய்தும், மோடி, அமித்ஷா படங்களை இடம்பெற செய்தும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டி ருந்தன. இதனால் இந்து முன்னணி அமைப்பினர் அந்த பேனர்களை அகற்றக்கோரி வத்தல க்குண்டு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீ சார் அந்த பேனர்களை அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் நாங்கள் வைத்த பேனரை எங்களிடம் அனுமதி பெறாமல் எவ்வாறு அகற்ற லாம் எனக்கூறி போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் அதேஇடத்தில் பேனரை வைக்காவிட்டால் சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். ஆனால் இந்து முன்னணி அமைப்பி னர் பேனர் வைக்ககூடாது என தெரிவித்து போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தனர். இச்சம்பவத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் வத்தலக்குண்டுவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- கொம்பேறி பட்டி பள்ளிக்கூடம் பின்புறம் சூதாட்டம் நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சூதாட்ட கும்பல் தலைவனாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறி பட்டி, புத்தூர், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்டத்தில் வெளியூர்களை சேர்ந்த நபர்களும் சொகுசு காரில் வந்து விளையாடி தங்கள் பணம் மற்றும் நகைகளை இழந்து வந்தனர்.
சூதாட்ட தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே இக்கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கொம்பேறி பட்டி பள்ளிக்கூடம் பின்புறம் சூதாட்டம் நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொம்பேறி பட்டியை சேர்ந்த ராசு(30), வடமதுரை வெங்கடேஷ்(45), அய்யலூர் சேகர்(43) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் சேகர் மற்றும் வெங்கடேஷ் தப்பிஓடி விட்டனர். சூதாட்ட கும்பல் தலைவனாக இருந்த ராசு என்பவரை போலீசார் கைது செய்து வேட சந்தூர்கோர்ட்டில் ஆஜர்படு த்தினர். தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார்.
- உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.
பெரும்பாறை:
திண் டுக்கல் மாவட்டம் பெரும் பாறை அருகே உள்ள மங்களம் கொம்பு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மங்களகார்த்தி (வயது 38). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இவர் கும்பரையூர் ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது சுவர் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.
- பசுபிக் பிராந்தியத்துக்கான பன்னாட்டு கூட்டுறவு முகமை, மலேசியாவில் நடைபெறும் 4-வது இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்.
- கடந்த ஆண்டு 22 மாணவர்கள் இத்துறை சார்பில் வேலை வாய்யப்பு பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத்துறை செயல்ப ட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக பல்கலைக்கழக அளவில் கூட்டுறவை பாடமாக வழங்கியது இத்துறை மட்டுமே. இந்த துறை 6 சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கல்வி மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தேசிய கூட்டுறவு கொள்கை தயாரித்தல், உன்னதபாரத இயக்கம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மதிப்பீடு செய்தல், செஞ்சு லுவை சங்கம் போன்ற பணிகளை தேர்ந்தெடுக்க வும் செயல்பட்டு வருகின்ற னர்.
கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற 17வது தேசிய கூட்டுறவு மாநாட்டில் முதுகலை மாணவர் ஒருவர் பங்கேற்றார். மேலும் 3 முதுகலை மாணவர்கள் பசுபிக் பிராந்தியத்துக்கான பன்னாட்டு கூட்டுறவு முகமை, மலேசியாவில் நடைபெறும் 4-வது இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் தேசிய அளவில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படு கின்றனர்.
இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்த ஆண்டு ரெப்கோ நுண்கடன் நிறுவ னத்தில் 23 மாணவர்கள் உள்பட பலர் வெவ்வேறு வங்கி பணிக்கு தேர்வாகி உள்ளனர். கடந்த ஆண்டு 22 மாணவர்கள் இத்துறை சார்பில் வேலை வாய்யப்பு பெற்றுள்ளனர்.
- தொடர்ந்து 8-வது முறையாக தங்கப்பதக்கம் பெற்ற ஒட்டன்சத்திரம் திரும்பிய கபடி அணி வீராங்கனை களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
- திறந்தவெளி வாகனத்தில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாக ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வரை அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தனர்.
சத்திரப்பட்டி:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக தங்கப்பதக்கம் பெற்ற ஒட்டன்சத்திரம் திரும்பிய கபடி அணி வீராங்கனை களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் சென்னையில் நடை பெற்றது.
பொதுப்பிரிவு கபாடி போட்டிகள் 21.07.2023 முதல் 25.07.2023 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட ஒட்டன்சத்திரம் பெண்கள் அணி தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்று பரிசுத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை வரவேற்கும் விதமாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை யில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாக ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வரை அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் அமெச்சூர் கபாடி கழக நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், கபாடி குழு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.
- வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் 1 கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம், கால் கிலோ என வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக ரூ.120 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தக்காளி வியாபாரியான சந்தோஷ் முத்து இது குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள் சமையலில் தக்காளி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.120 க்கு விற்கப்படும் தக்காளியை பாதிக்கு பாதி குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறேன். தரமானதாக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலையை குறைத்து வழங்கி வருகிறேன். இன்று மாலை வரை தக்காளி விற்கப்படும் என்று தெரிவித்தார்.
இன்று மலிவு விலை தக்காளி பொதுமக்களுக்கு வழங்க 5 டன் வரவழைக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு வழங்கவில்லை.
கடைகளில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை ரூ.60க்கு கொடுப்பதால் கால் கிலோ, அரை கிலோ என வாங்க வந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் 2 கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது.
- வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச் செல்கின்றனர்.
பழனி:
பழனி வழியாக கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் என தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள் திண்டுக்கல், உடுமலை செல்லும்போது தங்கள் வாகனங்களை பழனி ரெயில்நிலைய வாகன நிறுத்தத்தில் விட்டுவிட்டு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு மோட்டார் சைக்கிள்களை நிறுத்த முடியாமல் ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச்செல்கின்றனர். இதனால் வாகன திருட்டு அபாயமும் உள்ளது. எனவே ரெயில்நிலையத்தில் வாகன நிறுத்த வசதியை மீண்டும் கொண்டுவர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இன்னமும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. எங்களின் மோட்டார் சைக்கிள்களை ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வருகிறோம். எனவே மீண்டும் வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.






