என் மலர்
கடலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலி நகர காங்கிரஸ், நெய்வேலி இந்திரா நகர் காங்கிரஸ், நெய்வேலி ஐ.என்.டி.யூ. இளைஞர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி, காங்கிரஸ் இலக்கிய அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. , மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் குமார், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ரவிக்குமார்,நெய்வேலி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன், செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முருகன், நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜன்,நெய்வேலி இந்திராநகர் தலைவர் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ஜோதி சிவம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் அருகே பழையநல்லூர் சாலையந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கவிதா(17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வரும் வீரசெல்வம். கடந்த 6 மாதமாக கவிதாவிற்கு அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கவிதாவின் தாய் ரேவதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடலூர் அருகே கே.என்.பேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பார்த்திபன். இவர் டிப்ளமோ படிப்பு முடித்து கடந்த ஒரு மாதமாக கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களாக பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் முருகன் மகன் பார்த்திபனை கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பார்த்திபன் தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பார்த்திபனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பார்த்திபனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் இத்தாலியன் ரோடு, என்எல்சி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ரெங்கசாமி. இவர் என்எல்சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அலமேலு (வயது 47). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சம்பவத்தன்று நேற்று வீட்டில் ரங்கசாமி இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த அலமேலு வீட்டின் எதிரில் உள்ள கொட்டகைக்கு சென்று அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த ரெங்கசாமி அதிர்ச்சி அடைந்து நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் துப்புரவு ஊழியர்கள் மூலம் குப்பைகள் அந்தந்த பகுதியில் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது கம்மியம்பேட்டை மற்றும் கடலூர் முதுநகர் பகுதியில் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருவதால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் கெடிலம் ஆறு கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு தீவிரமாக இடம் பார்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காலியிடம் இருந்து வந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முட்புதர்கள் முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு டிராக்டர் மூலமாக அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு சென்றன. அப்போது அதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து திடீரென்று வாகனத்தை சிறை பிடித்து வெளியில் விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இங்கு யாரும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன.
திட்டக்குடி அருகே பட்டூர் சேர்ந்த தர்மலிங்கம் விவசாயி. இவரது மகள் அனுசுயா. இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு உறங்கி உள்ளனர். மறுநாள் காலை பார்த்த போது உறங்கிகொண்டு இருந்த அனுசுயாவை காணவில்லை.
காணமல் போன அனசுயாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அனுசுயாவை பட்டூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிரஞ்சீவி (25)என்பவர் கடத்தி சென்றதாக தெரிந்தது.
இதுகுறித்து தர்மலிங்கம் தனது மகளை மீட்டு தருமாறு ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அனுசுயாவை கடத்தி சென்ற சிரஞ்சீவியை வலைவீசி தேடி வருகின்றனர்.






