search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X
    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலி நகர காங்கிரஸ், நெய்வேலி இந்திரா நகர் காங்கிரஸ், நெய்வேலி ஐ.என்.டி.யூ. இளைஞர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி, காங்கிரஸ் இலக்கிய அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. , மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் குமார், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ரவிக்குமார்,நெய்வேலி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன், செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முருகன், நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜன்,நெய்வேலி இந்திராநகர் தலைவர் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ஜோதி சிவம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×