என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் அருகே மனைவி கண்முன் கணவரை தாக்கிய 4 பேர் கும்பல்
Byமாலை மலர்21 May 2022 10:18 AM GMT (Updated: 21 May 2022 10:18 AM GMT)
கடலூர் அருகே தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் மேல் அழிஞ்சுபட்டு பகுதியை சேர்ந்தவர் பற்குணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னம்பாக்கம் காலனி பகுதியில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் மோட்டார் சைக்கிள் சென்ற பற்குணன் செல்ல முடியாமல் இருந்ததால் அவர்களிடம் செல்வதற்கு வழி விட வேண்டும் என கேட்டபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த 4 பேரும் பற்குணனை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பற்குணன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பற்குணன் கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார், ஞானவேல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X