என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
    X
    பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

    கரும்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா- பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

    கரும்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீ மிதித்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கரும்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசேஷ பூஜைகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றது. 

    இதன் முக்கிய திருவிழா வானதீமிதி திருவிழா இன்று (20ம்தேதி)மதியம் 12மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீ மிதித்தனர். இதனை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.
    Next Story
    ×