என் மலர்
கடலூர்
- சந்தோஷ் 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
- சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கோட்டுச் சேரியை அடுத்த ராயன் பாளையத்தில் உள்ள பாட்கோ காலனியில் வசிப்பவர் சந்தோஷ். (வயது 20) இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
- போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்
கடலூர்:
விருத்தாசலம் வட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலூர் -விருத்தாசலம் நெடுஞ்சா லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருப்பதாக கூறி மந்தாரக்குப்பம் போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரசை கண்டித்து போரா ட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனை யடுத்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் கட்சியினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
விருத்தாசலம் சப்-கலெ க்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீத், மந்தாரக்கு ப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, தேசிய நெடுஞ்சா லை இளநிலை பொறியாளர் செந்தமி ழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா கவும், மேலும் அந்த பகுதியில் போக்குவ ரத்து இடையூறாக ஆக்கிரமி த்துள்ள கடைகளையும் அகற்றுமாறு அதிகாரிக ளிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்தனர்.
- சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- சசிகுமார் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் நெய்வேலியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் ஓரையூருக்கு வந்து போவது வழக்கம்.
இந்நிலையில் சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சசிகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்தார்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
- திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் போலீசாரை கைதி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர் கடந்த ஒரு வருட காலமாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோ தம் காரணமாக எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறை காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவரையும் கைது செய்தனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக எண்ணூர் தனசேகரன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் மாலை மீண்டும் சிறை வளாகத்திற்கு எண்ணூர் தனசேகரனை போலீசார் அழைத்து வந்தனர். இதனையடுத்து இன்று காலை கடலூர் மத்திய சிறை அலுவலர் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் சிறப்பு சோதனை குழுவில் 2-ம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (வயது 28) கைதி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1-க்கு சென்று செல்போன் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.
அப்போது கைதி எண்ணூர் தனசேகர், காவலர் பிரித்விராஜிடம் நான் இருக்கும் அறையை யாரும் சோதனை செய்யக் கூடாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலர்கள் பிரித்திவிராஜை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 200 ஆண்டுகளுக்கு முன் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார்.
- இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்த போது மிகவும் மிரமிப்பை எற்படுத்தியது.
10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். காழ்ப்புணர்ச்சி மற்றும் அறியாமை காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அடிப்படை உரிமை என்பது ஒரு பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி கொடிகள் என அனைத்தும் ஒரு குடும்பமே.
இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலியாகும்.
200 ஆண்டுகளுக்கு முன் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலின்போது தோன்றியவர் அவர்.
நாட்டில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும், புதிதாக வெளி நாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது.
இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டு கொண்டதில்லை.
ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு நமது நாடு. நாட்டில் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் கவனித்து கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்ததின் தலைமையை ஏற்கும்.
இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் கொள்கையை ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புவனகிரி அடுத்துள்ள மருதூரில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி ரவியுடன் தரிசனம் செய்தார்.
- சந்தியா பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம்கி ராமத்தை சேர்ந்தவர்ஏழுமலை. இவரது மகள் சந்தியா (17). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்தவரை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் அவரது தாய் சரிதா புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.
- மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
- உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது.
கடலூர்:
திட்டக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் 108 ஆம்புலன்ஸ். கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் என பொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
மேலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
திட்டக்குடியில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமன செய்து திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக அலட்சியமாக செயல்படுவதால் இதில் பாதிக்கப்படுவது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், சிறு குரு விவசாயிகள், சிறுகுரு வணிகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
- காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும்.
கடலூர்:
நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் வெகு ஜன தூய்மை இயக்கம் நடைபெற்றது. முன்னதாக, பிரதான சந்தைப் பகுதி யில் உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூய்மை இயக்க த்தை தொடங்கி வைத்தார். நிறுவன இயக்குநர்கள் சுரேஷ் சந்தி ரசுமன், சமீர் ஸ்வரூப், எம்.வெங்க டாசலம், தலைமை ஒற்றாடல் அதிகாரி எல்.சந்திரசேகர், அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், சிஐஎஸ்எப் பணியாளர்கள், ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தூய்மையின் முக்கிய த்துவத்தை வலியு றுத்தும் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பேசியதாவது: சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நிகழாண்டு தூய் மைக்கான செயல்பாடு களை திறம்பட ஒழுங்கமை ப்பதில் என்எல்சி இந்தியா முதலிடம் வகிக்கும் என்றார்.
- தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர்.
- அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.
கடலூர்:
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்ததால், தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே டாஸ்மாக் கடை களால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தி ருந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் - 2, பரங்கி ப்பேட்டை- 1, சேத்தியா த்தோப்பு -1, காட்டுமன்னா ர்கோவில் -2, பணிக்கன் குப்பம் -1, விருத்தாச்சலம் -1, வீராணம் ஏரிக்கரை வாக்கூர் -1, வடலூர் பார்வதிபுரம் -1, ஸ்ரீமுஷ்ணம் கானூர் -1 ஆகிய இடங்களில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையில் இருந்து வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த பணியாளர்கள் கவுன்சிலிங் மூலம் சீனியாரிட்டி படி பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இன்று முதல் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் அங்குள்ள அனைத்து மதுபானங்களும் முறைப்படி கணக்கு செய்து கடலூர் சிப்காட் வளா கத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
- மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி நடைபெறுகின்றது.
- மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் எடு -த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் கடலூர் கடற்கரைச் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சி.கே.பள்ளியில் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000 , 2-ம் பரிசு ரூ.7,000, 3-ம் பரிசு ரூ.5,000 என வழங்கபெறவுள்ளன. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது. கடலூர் மாவ ட்டத்தில் உள்ள மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுள் ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனுப்பவேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார்மே னிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழார்வமுள்ள மாண வர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.
- பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது.
- இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிெகாண்டு சென்றது. இந்நிலையில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலை மிக குறுகலாக உள்ளது. இதனையடுத்து பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது. இதில் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பஸ் டிரைவர் சாலை ஓரமாக சென்றுள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் பஸ் இறங்கியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். அதிர்ச்டவசமாக பள்ளத்தில் மழை பெய்ததில் சேரும் சகதியுமாக இருந்ததால் அதில் பஸ் இறங்கி கீழே சாயாதவாறு நின்றது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பள்ளத்தில் இறங்கிய பஸ்சை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.
- அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கீதா (வயது 22). இவர் வேலைக்கு செல்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த கீதா, திருடன் திருடன் என கத்தியதால் அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சீர்காழி தாண்ராசன்குப்பம் சேர்ந்தராம்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






