search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happening this evening"

    • ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம்.
    • ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும்.

    கடலூர்:

    தேவர்களின் சந்தியா காலமாக விளங்கும் ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் உத்திர நட்சத்திர நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆனித்திருமஞ்சனம் என்று போற்றப்படும். இந்த ஆனித்திருமஞ்சனம் திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் இன்று மாலை நடக்கிறது. திருவதிகை வீரட்டானேசு வரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்ஆகும்.

    அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு நடராஜர், சிவகாமசுந்தரி சாமிக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் நடக்கிறது. இதில் ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும். விழாவையொட்டி இன்று மாலை உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சாமிக்கு 11 வகையான மூலிகை திரவியங்களில் மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் மாடவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உற்சவதாரர், சிவ தொண்டர்கள், கோவில் குருக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×