search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girls High School"

    • ராமநாதபுரம் கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மைதானத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன. தலைவர் சண்முகராஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். மேலும் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மகர நோன்பு திடல், சுடலை மாடன் சுவாமி கோவில் வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
    • முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் இயங்கி வரும் தமிழாலயா இலக்கிய அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்,நினைவு பரிசு, பதக்கம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.காவேரி தலைமை தாங்கினார். தமிழாலயா அமைப்பின் நிறுவனரும், அமைப்பாளருமான பொன்.தாமோதரன் முன்னிலை வகித்தார்.வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து நினைவு பரிசு, சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழாலயா நிர்வாகிகள் கவிஞர்கள் சிவலிங்கம், தனுஷ்கோடி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    முடிவில், உதவி தலைமை ஆசிரியர் தர்மலட்சுமி நன்றி கூறினார்.

    • என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

     கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 11-வது வட்டம் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. நெய்வேலிஎன்.எல்.சி. பள்ளிகளின் கல்வித் துறை செயலாளரும்,பொது மேலாளருமான நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். என்எல்சி பொது மருத்து வமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரணி மவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உடல் நலனை பேணுவதில் யோகா சனத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு கூறினார். நெய்வேலி அறிவு திருக்கோவில் அணியின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகள் யோகாசனப் பயிற்சிகளை செய்தனர்.

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேட்டுப் பெருமாள் நகரில் உள்ளது. இங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வை 132 மாணவிகள் எழுதினர்.இதில் 132 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதமடித்து சாதனை படைத்தனர்.

    முதல் மதிப்பெண் ராஜேஸ்வரி 536, 2-வது மதிப்பெண் வான்மதி 525, 3-வது மதிப்பெண் ஜெயஸ்ரீ 523 பெற்றனர். இந்த சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆஷா, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கல்வி வளர்ச்சி குழுவினர், பொதுமக்கள் பாராட்டினர்.

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் அரவிந்த் 551, 2-வது மதிப்பெண் செந்தில்முருகன் 510, 3-வது மதிப்பெண் கிறிஸ்டோபர் 481 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய ரங்கன்தெரிவித்தார்.

    பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 61 ேபர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதல் மதிப்பெண் சாலின் 509, 2-ம் மதிப்பெண் சுபஸ்ரீ 499, 3-ம் மதிப்பெண் கவுசல்யா 464 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.

    அதேபோல் புஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 80 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் தினேஷ் 580, 2-ம் மதிப்பெண் ஓவியா 572, 3-ம் மதிப்பெண் ஜெகன் 570. இதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், காமர்சில் 1 மாணவர் 100 சதவீத மதிப்பெண்னும் பெற்றனர் என்று முதல்வர் ஞான சிகாமணி தெரிவித்தார்.

    தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் வினித் பாண்டி 585, 2-ம் மதிப்பெண் பிரின்ஸ்ராஜ் 584, 3-ம் மதிப்பெண் சுபாஷினி 579 பெற்றனர். இதில் அக்கவுண்டன்சியில் 5 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், வேதியலில் ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தெரிவித்தார்.

    ×