search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
    X

    வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேட்டுப் பெருமாள் நகரில் உள்ளது. இங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வை 132 மாணவிகள் எழுதினர்.இதில் 132 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதமடித்து சாதனை படைத்தனர்.

    முதல் மதிப்பெண் ராஜேஸ்வரி 536, 2-வது மதிப்பெண் வான்மதி 525, 3-வது மதிப்பெண் ஜெயஸ்ரீ 523 பெற்றனர். இந்த சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆஷா, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கல்வி வளர்ச்சி குழுவினர், பொதுமக்கள் பாராட்டினர்.

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் அரவிந்த் 551, 2-வது மதிப்பெண் செந்தில்முருகன் 510, 3-வது மதிப்பெண் கிறிஸ்டோபர் 481 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய ரங்கன்தெரிவித்தார்.

    பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 61 ேபர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதல் மதிப்பெண் சாலின் 509, 2-ம் மதிப்பெண் சுபஸ்ரீ 499, 3-ம் மதிப்பெண் கவுசல்யா 464 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.

    அதேபோல் புஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 80 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் தினேஷ் 580, 2-ம் மதிப்பெண் ஓவியா 572, 3-ம் மதிப்பெண் ஜெகன் 570. இதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், காமர்சில் 1 மாணவர் 100 சதவீத மதிப்பெண்னும் பெற்றனர் என்று முதல்வர் ஞான சிகாமணி தெரிவித்தார்.

    தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் வினித் பாண்டி 585, 2-ம் மதிப்பெண் பிரின்ஸ்ராஜ் 584, 3-ம் மதிப்பெண் சுபாஷினி 579 பெற்றனர். இதில் அக்கவுண்டன்சியில் 5 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், வேதியலில் ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தெரிவித்தார்.

    Next Story
    ×