என் மலர்
கோயம்புத்தூர்
- ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
- பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் அமாவாசை நாட்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தன்று ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடத்திற்கான 30-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.
குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை கோவில் அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை வணங்கினர்.
அன்னைத்தமிழ் லட்சார்ச்சனையை முலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர். உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கர்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.
- மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டார்.
கோவை,
தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் வழங்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 குடும்ப அட்டைகள் உள்ளன. 1401 ரேஷன்கடைகள் உள்ளன.
கோவையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
அதன்படி முதல்கட்டமாக 839 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் 562 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெறும்.
கடந்த 20-ந் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர். அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது. டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.
இன்று கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாம்களில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் மாதிரி பதிவு முகாம் நடை பெற்றது. ஆர்.எஸ்.புரம் பிஷப் உபகாரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விண்ணப்பங்கள் பெறும் மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எவ்வாறு பெறப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விண்ணப்பம் கொடுக்க வரும் பெண்களிடம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தகுதியான நபர்களுக்கு உரிமை தொகை கிடைப்பதற்கு தேவையான அத்துனை ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
மேலும் முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.விண்ண ப்பம் நிரப்ப தெரியாதவர்களுக்கு நீங்களே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இதேபோல் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ம.ந.க.வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த மாதிரி முகாமையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர்கள் சேகர், மகேஷ் கனகராஜ், நிர்வாக அலுவலர் தமிழ்வேந்தன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பார்மன் அலி, மண்டல சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் உள்ளனர்.
- சுரேஷிடம் இருந்து ரூ. 850 பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
- சுரேஷ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). மெக்கானிக். சம்பவத்தன்று இரவு தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து ரூ. 850 பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்தது சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஜெகத் ஹரி (20), விஷாகன்(22), பிரதீப் (26) மற்றும் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
- புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி புஷ்பா (வயது47). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ மொபட் மீது மோaதியது.
இதில் நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பையை பறித்து கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பினர்.
கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை பறித்த கும்பல் அதில் ரூ.500 மட்டும் இருந்ததால் ஏமாற்றம் அடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.
இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது ஆட்டோவை மோத செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
- கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை.
குனியமுத்தூர்
கோவை காந்திபார்க் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பொதுக் கழிப்பிடம் உள்ளது.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்று பஸ் ஏறி பயணம் செய்கின்றனர்.
இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் என்று வேறு எதுவுமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இந்த கழிப்பிடத்தை உபயோகப்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது பல ஆண்டுகளாக இது மூடப்பட்ட நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.சிவானந்த காலனி, காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், சுங்கம், ராமநாதபுரம், புலியகுளம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று தான் பஸ் ஏறி செல்கின்றனர்.
மேலும் இந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவு இல்லாததால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது. உள்ளே சென்று பார்க்கும் போது குப்பை மேடுகளும், காலி பாட்டில்களும் காணப்படுகிறது.
இது குறித்து மக்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி இந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி குத்தகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு வருமானம் வரும்.
ஆனால் நகரின் மிகவும் முக்கியமான பகுதியாகவும், மையப் பகுதியாகவும் அமைந்துள்ள காந்தி பார்க் பகுதியில் இப்படி ஒரு பொதுக் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் வெறுமனே கிடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அவசரத்துக்கு செல்வதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதை காண முடிகிறது.
எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
- 2 பேரும் கோவையில் வசிக்கும் நண்பரை பார்க்க வந்து விபத்தில் சிக்கினர்.
கோவை,
கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து (வயது 47).
இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
அவர் ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே சென்ற போது எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து பலத்த காயம் அடைந்து பலியானார். மொபட்டில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இப்ராகீம் தாகீம் (24) என்பதும், மற்றொருவர் வடக்கு சூடான் நாட்டைச் சேர்ந்த பஷீர் சுகைப் (22) என்பதும் தெரியவந்தது.
காயம் அடைந்த இவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இப்ராகீம் தாகீம் நேற்று பலியானார். பஷீர்சுகைப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கோவையில் வசிக்கும் நண்பர்களை பார்க்க வந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
- தி டீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது
- தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
மேட்டுப்பாளையம்,
காரமடை-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் பழக்கடை, மருந்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை இயங்கி வருகின்றன.
இங்கு காரமடையை சேர்ந்த நாகராஜ்(45) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். பழக்கடையில் உள்ள பழங்களை டிரேவில் வைத்து கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கடையில் வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியில் ஓடி வந்தனர்.
சிறிது நேரத்தில் தீ குபு, குபுவென பிடித்து எரிய தொடங்கியது. குடோன் முழுவதும் தீ பரவியதால் அந்த பகுதியே புகை மண்ட லமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காரமடை போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கு பற்றி எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக கடையின் முன்புறம் இருந்த பழக்கடைக்கு தீ பரவ வில்லை. இதனால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் காரமடை நகரமன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
- விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
- வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சரளப்பதி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக இரவு நேரத்தில் மக்னா யானை சுற்றி திரிகிறது.
இந்த யானை அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் இந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்தும், கும்கி யானைகளை நிறுத்தியும் மக்னா யானையை ஊருக்குள் வரவிடாமல் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அடங்கிய குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இதையடுத்து சரளப்பதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வனத்துறையினர், பிரச்சினையின் தீவிரத்தை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோழிக முத்தி யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் துணையுடன் கடந்த சில நாட்களாக மக்னா யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், சேத்துமடை கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் சரளப்பதியில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அப்போது கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் முடியவில்லை. எனவே மக்னா யானையை பிடித்து முகாம் யானையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் மக்னா யானையை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தங்களிடம் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.
வனத்துறையினர் கூறும் போது, மக்னா யானையை பிடிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்பதால் யானையின் உடல்நிலை குறித்து வனகால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன்பின்னர் யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றனர்.
- தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
- வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் இயக்கப்படுவதால் கோவை மாவட்டத்தை சுற்றி இருக்க கூடிய அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவை விமான நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றன.
நேற்று மதியம் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர்.
இந்த விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். ஒவ்வொருவராக தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் கைப்பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தது.
இதை பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு இருந்த துப்பாக்கி குண்டு மற்றும் பெட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அந்த வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சிங் (வயது42) என்பதும், காண்டிராக்ட் மற்றும் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவரது சகோதரர் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை பார்க்க ராஜஸ்தானில் இருந்து கோவை வந்ததும், அவரை பார்த்து விட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப புறப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி குண்டு பையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது, அது தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை என போலீசாரிடம் பதில் அளித்து கொண்டிருந்தார்.
போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது பையில் துப்பாக்கி குண்டு வந்தது எப்படி? இவரே எடுத்து வந்து விட்டு போலீசில் சிக்கியதால் மாற்றி பதில் அளிக்கிறாரா? அல்லது வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதற்காக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
- சூடான் நாட்டை சேர்ந்த 2 பேரில் ஒருவரிடம் இந்திய நாட்டின் ஆதார் அடையாள அட்டை இருந்ததுள்ளது.
கோவை,
கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(வயது 47).
இவர் நேற்று இரவு பணி முடிந்து 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
அவர் ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே சென்ற போது எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்துவுக்கு கண், தாடை, பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மொபட்டில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸ்காரர் மாரிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சூடான் நாட்டை சேர்ந்த சுஹைப்(22), இப்ராஹிம்(24) என்பது தெரிய வந்தது.
இவர்களில் சுஹைப் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி-பார்ம் படித்து வருகிறார். இவரது நண்பர் சுராக் போத்தனூர் பகுதியில் தங்கி உள்ளார். அவரை பார்க்க சுஹைப் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவைக்கு வந்து அவருடன் தங்கினார்.
இந்தநிலையில், நேற்று இரவு சுஹைப் குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள தனது மற்றொரு நண்பரான இப்ராஹிமை பார்க்க சென்றார்.
அங்கிருந்து 2 பேரும் மொபட்டில் வெளியில் வந்த போது விபத்து நடந்தது தெரியவந்தது.
விபத்தில் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இப்ராஹிம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த சூடான் நாட்டை சேர்ந்த 2 பேரில் ஒருவரிடம் இந்திய நாட்டின் ஆதார் அடையாள அட்டை இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆதார் அட்டை எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் சூடான் நாட்டை சேர்ந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனோகரனை கடத்த வேண்டியவர் இல்லை என தெரிந்ததும் இறக்கி விட்டு தப்பினர்.
- மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை பீளமேடு ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்தவர் மனோகரன்(வயது67). மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் திருச்சி ரோடு நஞ்சப்பா நகர் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவரை காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். எதற்காக என்னை கடத்தினீர்கள் என கேட்டார். அப்போது அந்த கும்பல் மனோகரனிடம் உன் பெயர் கந்தசாமிதானே என கேட்டனர்.
அவர் இல்லை என்று சொல்லியும் நம்பாத அந்த கும்பல் அவரது ஆதார் கார்டை வாங்கி பார்த்தனர். அதில் மனோகரன் என இருந்தது. இதனால் அந்த கும்பல் அவரை எல்அண்டி பைபாசில் உள்ள கல்லூரி அருகே இறக்கி விட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கந்தசாமி என்பவருக்கு பதிலாக மனோகரனை அந்த கும்பல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கந்தசாமி என்பவர் யார்? அவரை அந்த கும்பல் கடத்த வந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆளை மாற்றி முதியவரை காரில் கடத்தி சென்று பின்னர் இறக்கி விட்டு சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
- கோவையில் உள்ள நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார்பாடி தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, புலுவப்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூார், காரமடை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கோவையில் உள்ள உழவர்சந்தைக்கு காய்கறிகள் உற்பத்தியை பஸ்சில்கொண்டு வருகிறார்கள். தினசரி காலையில் வந்து மதியம் வரை மார்க்கெட் வருகிறார்கள்.
விவசாயிகள், விவசாய குடும்பத்தினர், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வரும போதும், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும்போதும் விவசாய பணிகள், விவசாய கூட்டங்களில் பங்கேற்க வரும் போதும் பஸ் கட்டணங்கள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
கோவையில் உள்ள நீர் நிலைகளில் இரவு நேரங்களில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தொண்டாமுத்தூர் ஒன்றியம் நரசிபுரம், பச்சாவயல் தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






