search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fire broke"

    • தி டீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது
    • தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த வணிக வளாகத்தில் பழக்கடை, மருந்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை இயங்கி வருகின்றன.

    இங்கு காரமடையை சேர்ந்த நாகராஜ்(45) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். பழக்கடையில் உள்ள பழங்களை டிரேவில் வைத்து கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கடையில் வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியில் ஓடி வந்தனர்.

    சிறிது நேரத்தில் தீ குபு, குபுவென பிடித்து எரிய தொடங்கியது. குடோன் முழுவதும் தீ பரவியதால் அந்த பகுதியே புகை மண்ட லமாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காரமடை போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கு பற்றி எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    அதிர்ஷ்டவசமாக கடையின் முன்புறம் இருந்த பழக்கடைக்கு தீ பரவ வில்லை. இதனால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் காரமடை நகரமன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    • இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

    கோத்தகிரி,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் ரோட்டில் டானிங்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மர ஆலை உள்ளது.

    இங்கு வீட்டு கட்டுமான பொருட்கள் மற்றும் மரவகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மரஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள மரவீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது.

    எனவே ஊழியர்கள் திரண்டுவந்து பார்த்தனர். அதற்குள் மரவீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி, சிறப்பு நிலை அலுவலர் மாதன் தலைமையில் நித்தியானந்தன், மணி, விஜயகுமார், முத்துக்குமார், மணி, சரத் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கோத்தகிரி மர வீட்டுக்குள் பரவிய தீயை தீயணைப்புத்துறை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த திடீர் தீ விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில் கோத்தகிரி மர ஆலை குடியிருப்பு அருகே உள்ள மர வீட்டில் காவலாளி நேற்று இரவு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வேலைக்கு வந்ததும், அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு கீழே விழுந்து, துணியின் மேல் பற்றி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரான்ஸ்பார்மரின் மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டு இருந்தது. இரவு 9 மணிஅளவில் அந்த பகுதியில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

    அப்போது சம்பத் நகரில் இருந்து நாராயணவலசுக்கு செல்லும் வழியில் சாலையோரமாக உள்ள டிரான்ஸ்பார்மரின் உச்சியில் இணைப்பு கொடுக்கப்பட்ட மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு சிறிது தூரத்துக்கு முன்பே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர்.

    மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி கீழே விழுந்ததால் அதன் அருகில் யாரும் செல்லவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு தடைபட்டதால் தீ தானாகவே அணைந்தது. இதனால் பெரும் அசம்பா–விதம் தவிர்க்கப்பட்டது.

    அதன்பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் அங்கிருந்து கடந்து சென்றார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது .
    • முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கி ன்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வ போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகு தியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது . தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்து வதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்கம்பிகளில் முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • ரோட்டோரம் கிடந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது.
    • சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது அய்யம்பாளையம். இங்கு ஏராளமான வீடுகள் உள்ளது.

    இந்த வீடுகளில் உள்ள குப்பைகளை அங்குள்ள ரோட்டோரம் கொட்டி வந்தனர். இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது.

    அந்த பகுதியில் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் இருந்ததால் தீ பரவாமல் இருக்க அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×