search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் தீ விபத்து
    X

    கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் தீ விபத்து

    • இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

    கோத்தகிரி,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் ரோட்டில் டானிங்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மர ஆலை உள்ளது.

    இங்கு வீட்டு கட்டுமான பொருட்கள் மற்றும் மரவகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மரஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள மரவீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது.

    எனவே ஊழியர்கள் திரண்டுவந்து பார்த்தனர். அதற்குள் மரவீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி, சிறப்பு நிலை அலுவலர் மாதன் தலைமையில் நித்தியானந்தன், மணி, விஜயகுமார், முத்துக்குமார், மணி, சரத் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கோத்தகிரி மர வீட்டுக்குள் பரவிய தீயை தீயணைப்புத்துறை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த திடீர் தீ விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில் கோத்தகிரி மர ஆலை குடியிருப்பு அருகே உள்ள மர வீட்டில் காவலாளி நேற்று இரவு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வேலைக்கு வந்ததும், அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு கீழே விழுந்து, துணியின் மேல் பற்றி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×