என் மலர்
கோயம்புத்தூர்
- காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
- கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
கோவை,
கோவை குற்றாலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவி யில் நீர்வ ரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இதனால் கடந்த 4 நாட்களாக கோவை குற்றாலத்துக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடை நீக்கப்பட்டு குளியலுக்கு அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்த னர்.
- ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை டவுன்ஹாலில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வரிசையாக பஸ் நிறுத்த நிழற்குடைகள் உள்ளன. அங்கு ஏராள மான பயணிகள் காத்திருந்து பஸ்ஏறி செல்வது வழக்கம். அதுவும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகளின் கூட்டம் அலைமோதும்.
ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், இந்த பகுதிகளில் உள்ள நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம், ஆத்துப்பாலம், கோவைப்புதூர், மதுக்கரை, குனியமுத்தூர், குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர், சாய்பாபாகாலனி, கணுவாய், துடியலூர், கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம், காந்தி பூங்கா , ஆர் எஸ் புரம் ,காந்திபுரம் காரமடை மற்றும் கோவையின் சுற்றுவட்டார பகுதி அனைத்திற்கும் மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் இருந்து வாகன போக்குவரத்து உள்ளது. எனவே அங்கு 24 மணி நேரமும் பயணிகளை பார்க்க முடியும்.
ஒவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் குறிப்பிட்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி 7-ம் நம்பர் பஸ் நிற்கும் இடத்தில் ஒரு நிழற்குடை உள்ளது.
அது எந்தநேரமும் சோம்பேறிகளின் புகலிட மாக உள்ளது மற்றும் போதை கும்பல் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு பீடி-கஞ்சா புகைத்து கொண்டு அங்கேயே படுத்து தூங்குவதை பார்க்க முடிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இது அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதை போக்கி வருகின்றனர்.
போலீசார் ரோந்து வரும்போது அந்த கும்பலை எச்சரிக்கை செய்து அனுப்பி வைப்பர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் நிழற்குடைக்கு வந்திருந்து ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளை பேசி பொழுதை கழித்து வருகின்றனர். இது பயணிகளுக்கு
மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகரின் மைய பகுதியாக விளங்கும் டவுன்ஹால் பகுதியில் மேற்கண்ட அத்துமீறலுக்கு போலீசார் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்தால்மட்டுமே பயணிகள் கூச்சமின்றி பேருந்து நிறுத்தத்தில் நிம்மதியாக காத்திருந்து பஸ் ஏறி செல்ல முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.
- பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
- பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்,
தர்மபுரி மாவட்டம் கொல்லகொட்டகை என்ற ஊரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 28). இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமி கட்டிடத் தொழில் செய்து வருகிறார். தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் தனது மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.
தனியாக வசித்து வரும் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிகரை பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொன்னுச்சாமி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார். திடீரென அந்த பெண்ணுடன் அவர் மாயமானார்.
இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரில் தங்கள் மகளை காணவில்லை எனவும், பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்கு வந்து சென்ற வாலிபர் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான சிறுமியை பொன்னுசாமி திருமணம் செய்து கொண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.
சிறுமியை ஆசை காட்டி ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ரெனில்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரெனில்குமார் (வயது 35). இவர் கோவை பெரியக்கடை வீதியில் தங்கி இருந்து செல்போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த வாரம் இளம் பெண்ணுக்கு ரெனில்கு மாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இளம் பெண் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இதனால் ரெனில்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன் படி விஷத்தை குடித்தார். பின்னர் பிளேடால் கை மற்றும் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரெனில்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் ரெனில்குமாரின் உறவினர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக பாலக் காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெனில்குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிசாமிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சியாமளா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது.
- வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.
கோவை,
கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 60 இடங்கள், மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சல் காரணமாக 56 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாளில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் உள்நோயாளிகளாக தினமும் 5 பேர் வரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் மொத்தம் 85 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், மாஸ் கிளினீங், சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தவிர பொதுமக்களுக்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த, கொசு ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எனவே வீடுகளில் குடங்கள், டிரம் போன்றவை யில் சேகரிக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். குடம், டிரம் போன்றவற்றை நார் வைத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கை வைத்து தேய்த்தால் கொசு முட்டை அழியாது. தண்ணீரை காற்று நுழையாத வகையில் நன்றாக மூடி வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பயன்படுத்தாமல் உள்ள அறைகள், மொட்டை மாடி போன்ற இடங்களில் கொசு புழுஉற்பத்தியை தடுக்கும் வகையில் தூய்மையாக வைத்து கொள்ள வேண் டும். வீடுகளில் வளர்க்கும் மணி பிளான்ட் போன்றவை களில் வைக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.
கட்டுமானம் நடக்கும் பகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் தொழிலாளர்கள், ஊருக்கு செல்லும் போது அங்குள்ள பாத்திரங்கள், பொருட்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தம் செய்து விட்டு தலைகீழாக வைத்து விட்டு செல்ல வேண்டும். இதனை கட்டு மான உரிமையா ளர்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டின் கட்டுமானத்தின் போது கான்கிரீட் தளம் அமைக்கும் போது நீண்ட நாட்கள் தண்ணீரை தேங்க விடக்கூடாது. அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். அல்லது தண்ணீரின் மீது ஆயில் ஸ்பிரே செய்து விட வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கையால் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். வீட்டை சுற்றியுள்ள பழைய டயர், உடைந்த பானை போன்ற மழைநீர் தேங்க கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி முதலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு சொந்தமான குடிசை வீடு அந்த பகுதியில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் வாடகைக்கு குடியேறினார். அவர் குடிசை வீட்டில் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இரவு இளம்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கினார்.
அப்போது திடீரென வீட்டில் மேற்கூரையில் தீ பிடித்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக இளம்பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அதற்கு தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இது குறித்து அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
- நான் ஜெயபிரகாஷிடம் என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் காளப்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயபிரகாஷ் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம். என்னை ஜெயபிரகாஷ் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் ஜாலியாக இருக்கும்போது அவர் எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
மேலும் அவர் கோவையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்ற எண்ணத்தில் நான் இதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
பின்னர் நான் ஜெயபிரகாஷிடம் என்னை திருமணம் செய்யும்படி கூறினேன். ஆனால் அவர் ஜாதகம் பொருத்தவில்லை என காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அவர் என்னிடம் நீ திருமணம் செய்ய வலியுறுத்தினால் 2 பேரும் ஜாலியாக இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக என்னை மிரட்டினார்.
மேலும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்த நான் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்தேன். தொடர்ந்து அவர் மிரட்டி வந்ததால் மீண்டும் நான் அணிந்து இருந்த 3 பவுன் செயினை அவரிடம் கொடுத்தேன். என்னிடம் பணம் மற்றும் செயினை பெற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
பணம், செயினை பறித்த பின்னரும் தொடர்ந்து என்னை மிரட்டி வரும் ஜெயபிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ஜெயபிரகாஷ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காந்திபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
வடகோவை சிந்தாமணியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். இவரது மனைவி லீலாவதி. (வயது 32). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
கென்னடி தியேட்டர் அருகே சென்ற போது எதிரே அதி வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காந்திபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தை ஏற்படுத்தி யவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெரை ட்டிஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அதிவேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சில நேரங்களில் சாலையை கடக்க முயலும் பாம்புகள் சாலையில் வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் பார்க்க முடிகிறது.
- அச்சத்தில் உறைந்திருக்கும் பொதுமக்கள்
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் அடுத்து கோவை மாநகராட்சி 100-வது வார்டு பகுதி உள்ளது. இந்த வார்டில் ஐஸ்வர்யா நகர், அண்ணாபுரம், கார்மல் நகர் உள்பட பல்வேறு பகுதி கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதால், குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழும் பெண்கள் மிகவும் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஐஸ்வர்யா நகரில் புது பள்ளிவாசலுக்கு பின்புறம் கிணறு ஒன்று உள்ளது. இதிலிருந்து தான் பாம்புகள் அதிகளவில் வருகிறது.
தற்போது இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இதனால் சாலையோரம் உள்ள புதர்கள் மற்றும் செடி, கொடிகள் அகற்றப்படுகிறது.அங்கிருந்தும் பாம்புகள் வெளியேறி குடியிருப்பு பகுதி–களுக்குள் வந்துவிடுகிறது. இதன் காரணமாக அங்கு இருக்கவே அச்சமாக உள்ளது.
சில நேரங்களில் சாலையை கடக்க முயலும் பாம்புகள் சாலையில் வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் பார்க்க முடிகிறது.
தற்போது பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் தெருக்களில் விளையாடுவார்கள். அப்படிபட்ட சமயங்களிலும் பாம்புகள் தெருக்களில் வருவதால் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பயமாக உள்ளது.
எனவே கோவை மாநகராட்சி 100-வது வார்டு பகுதியில் சுற்றி திரியும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்
கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்
- கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
- தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது.
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவ்விடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகளும் இங்கு நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
ஆனால் இன்றைய நாள் வரை அது பயன்பாட்டில் இல்லாமல் வெறுமனே நின்று கொண்டு காட்சியளிக்கிறது. இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருபவர்களும், பஸ் ஏற வருபவர்களும் அவசரத்துக்கு இதனை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் நீண்ட நாட்களாக சிறுநீர் கழிப்பதற்கு பொது கழிப்பிடம் இல்லாமல் இருந்தது. கோவை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் இப்பகுதியில் இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கழிப்பிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகராட்சி உடனே தலையிட்டு இதனை திறக்க வேண்டும். இதேபோன்று மாநகராட்சி பகுதி முழுவதும் வைக்கப்பட்டு, உபயோகமில்லாமல் இருக்கும் இந்த சிறுநீர் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- கண்காணிப்பு காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் கலைவாணி (வயது 65).
இவர் இன்று அதிகாலை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.
இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா க்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை 3.05 மணிக்கு வரும் டிப்டாப் உடை அணிந்து வரும் வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த ஆட்டோவிற்குள் ஏறி அமர்ந்து கொள்கிறார்.
3.40 மணி அளவில் வீட்டு வாசலில் கோலம் போட்ட கலைவாணியிடம் இருந்து செயினை பறித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.






