என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • இருப்பினும் ஆபத்தான அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.
    • சர்வீஸ் சாலையில் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

    மாங்காடு:

    தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்வதற்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் உள்ளது. குறிப்பாக இரண்டாம் கட்டளையில் இருந்து மவுலிவாக்கம் வரை இந்த சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மழை காலங்களில் பரணிபுத்தூர், அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி, மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமல் அதற்கு அடியிலேயே புஷ் அண்ட் துரோ முறையில் 2 இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டது.

    இதற்காக பரணிபுத்தூர் சர்வீஸ் சாலை முழுவதுமாக தோண்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வந்தது.

    தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த கல்வெட்டின் மீது தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    இருப்பினும் ஆபத்தான அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதியில் மண் முழுவதும் உள்ளே இறங்கினால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த பகுதியில் மீண்டும் தார் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வர வேண்டும் எனவும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெடுஞ்சாலைதுறையினர் இந்த சர்வீஸ் சாலையில் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

    • திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், இரணியம்மன் நகர் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை பகுதியை சேர்ந்த சூரியபிரசாத் (வயது 24), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8 மதுபானம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து மண்ணிவாக்கம் புதுநகர், ரோஜா பூ தெருவில் மது விற்பனை செய்து கொண்டிருந்த முத்து (36), வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே மது விற்ற போஸ் (54), வண்டலூர் வெளிவட்ட மேம்பாலம் அருகே மது விற்ற மணிகண்டன் (22), ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் பகுதியில் மது விற்ற மணி (28), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற பீரி வெங்கடேசன்(வயது35). ரவுடியான இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதி பட்டியலின மண்டல தலைவராக இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெங்கடேசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாணையை தீவிரப்படுத்தி கொலையாளிகள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    வெங்கடேசன் நேற்று இரவு கடைசியாக யாருடன் சென்றார்? அவரை அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து உள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் வெங்கடேசன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்து உள்ளார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை நோட்டமிட்டு பழிதீர்த்து விட்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிலைகள் நாளை முதல் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி மாவட்டத்தில் 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சிலை பாதுகாப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் வைத்து பிரதிஷ்டை செய்த சிலைகளை நாளை 20-ந் தேதி, 22.09.23 மற்றும் 24.09.2023 ஆகிய மூன்று நாட்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகளில் 248 சிலைகள் கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 255 சிலைகள் சம்மந்தப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள ஏரிகள், குளங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் கடற்கரை கொண்டு செல்லப்படும்.

    மதுராந்தகத்தில் இருந்து முதுகரை சந்திப்பு வழியாக கடலூர் குப்பம் கொண்டு செல்லப்படும். மேல் மருவத்தூரில் இருந்து சித்தாமூர் வழியாக தழுதாலிகுப்பம் கொண்டு செல்லப்படும். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சூனாம்பேடு வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்லப்படும். தொழப்பேடுல் இருந்து கயப்பாக்கம் வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அத்தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 72001 02104 மற்றும் 044-2954 0888 ஆகிய பிரத்யேக எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது.
    • மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி ஏரிகளில், பொதுப்பணித் துறையினர் சவுடு மண் எடுத்து வருகின்றனர்.

    மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலம் பகல் நேரத்தில் மணல் மீது தார்ப்பாய் போடாமல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அதில் இருந்த மணல் சாலையில் விழுந்து புழுதியாக மாறிவருகிறது.

    இதனால் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது. முக்கியமாக வசந்தபுரி, அம்பாள் நகர் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டு, தற்போது பெய்த மழையால் சகதியாக மாறி தார்சாலை இல்லாத அளவுக்கு மறைந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மழை பெய்யும் போது அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மணல் சாலையில் செல்லும்போது வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    தற்போது செங்கல்பட்டு பஸ்நிலையம் ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி ரெயில் நிலையம் அருகே உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதிய இடவசதி இல்லாததாலும், வாகன பெருக்கம் காரணமாகவும் செங்கல்பட்டு பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெண்பாக்கம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு சுமார் ரூ.40 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய பஸ்நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது. பஸ்நிலைய பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பஸ்களை நிறுத்தும் வகையிலும், சுமார் 67 நான்குசக்கர வாகனங்கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் பகுதி அமைய இருக்கிறது. மேலும் 30 கடைகள், ஓட்டல்கள், பெரியவளாகம், சுற்றுலா தகவல் மையம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, செங்கல்பட்டு நகரின் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. நிலம் கையகப்படுத்தும் செலவு திட்டத்திற்கு அதிகமாக இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. எனவே, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் நகருக்குள் நெரிசல் குறையும் என்றார்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிலையம் மாற்றலாகி வெண்பாக்கம் பகுதிக்கு பஸ்நிலையம் மாற்றபடும். பொது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியும் மற்றும் அருகில் உள்ள சில பகுதிகளை அப்புறப்படுத்தி நகர பஸ்கள் ரெயில் நிலையத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
    • நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

    மாமல்லபுரம்:

    இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.

    இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைவைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் பொது இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 313இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் 13 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    காமாட்சியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் ரூ.15 லட்சத்தில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயக பெருமானுக்கு பலவிதமான நறுமண பொருட்களால் கலச அபிஷேகமும். சிறப்பு அலங்காரமும், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து லட்சர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் மற்றும் தேரடி பகுதிகளில் விநாயகர் சிலை, பூ, பழங்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியது.

    வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 5 நாட்களில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    திருவள்ளூரில் கடந்த ஆண்டைவிட குறைவான இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். திருவள்ளூரில் 111, திருத்தணியில் 121, ஊத்துக்கோட்டையில் 209, பொன்னேரியில் 46, கும்மிடிப்பூண்டியில் 153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.

    சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் வைத்து வழிபட சிறிய வகை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி மா.பொ.சி. சாலை மார்க்கெட் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. ஏராளமான பொதுமக்கள் பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட விநாயகருக்கு படையலிடும் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று காலை கூட்டம் அதிகாமாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அதிகம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் வழபட்டு சென்றனர்.

    மாமல்லபுரம் கடலில் வருகிற 24-ந் தேதி விநாயர் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் சிலைகளை கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக் ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
    • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

    இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

    சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
    • மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:-

    நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், சதானந்தபுரம், மப்பேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடுகளை வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீடுகளிலே கட்டி வளர்க்க வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
    • வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசார் செட்டிப்புண்ணியம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகபடும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.

    இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 25), என்பதும் இவர் 2 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்து வருகின்றனர்.
    • பொதுமக்களின் போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், விஜயலட்சுமி தம்பதியர் நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

    ஆகவே இந்த இடத்தில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். நேற்று இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையொட்டி இன்று மோச்சேரி கிராம பொது மக்கள் 250-க்கும் ஏற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் 45 நிமிடங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×