search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறைமலைநகர் அருகே தேவி கருமாரியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு
    X

    மறைமலைநகர் அருகே தேவி கருமாரியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

    • கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.
    • புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மறைமலைநகர்:

    மறைமலைநகர் அடுத்துள்ள மகிந்திரா சிட்டியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூஜைகள் முடிந்து இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் பணியாளரான சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகத்சிங் நகரைச் சேர்ந்த செல்வா (வயது28) கோவிலை சுத்தம் செய்ய வந்தார்.

    அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×