search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நவீன வசதியுடன் புதிய போலீஸ் நிலையம்
    X

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நவீன வசதியுடன் புதிய போலீஸ் நிலையம்

    • கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள்.
    • மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கால்வாய் பணியை முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கால்வாய் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் கல்வெட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது. தீபாவளிக்கு முன்பு புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும் போது பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டரை சி.எம்.டி.ஏ. கோரி உள்ளது.

    சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. ஒரே இடத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, கண்காணிப்பு கேமிரா மையம், ஆயுதங்கள் வைப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கீழ்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடம், முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள். நவீன வசதியுடன் போலீஸ் நிலையம் அமைய உள்ளது. பஸ் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.

    Next Story
    ×