என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
    • நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணாநகர்:

    பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

    இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சன்ஹகி பால் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சமூகவலைதளம் மூலம் சந்தக் தாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் கொல்கத்தா டம் டம் மதுகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று சந்தக்தாஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சன்ஹகி பாலுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சன்ஹகி பால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்தக் தாசை குத்தினார். ஆத்திரம் தீரும் வரை 10 தடவை அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தக் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சந்தக் தாஸ் தனது காதலி சன்ஹகி பால் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.

    சன்ஹகிபால் மாடர்ன் உடை அணிந்து இருந்தார்.

    காதலனை கொன்று ஜெயிலுக்கு சென்றதால் அவரது மகனை போலீசார் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • வங்காளத்தின் வளர்ச்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர்

    மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மேற்கு வங்காள மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மக்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராகிவிட்டது.

    திரிணாமுல் காங்கிரசைப் பொறுத்தவரை வங்காளத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை இல்லை. மாறாக ஊழல், உறவினர் மற்றும் துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    வங்காள மக்களை ஏழைகளாக வைத்திருக்க விரும்புவதாலேயே, அக்கட்சியின் அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    • மேற்கு வங்காளம் சென்ற பிரதமர் மோடி ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • பிரதமர் மோடியை மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மாநில வாரியாக சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் வந்தாலும் அவர்களை மாநில முதல் மந்திரி சந்திப்பது வழக்கம். எனவே இது ஒரு சம்பிரதாய சந்திப்பு. இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை என தெரிவித்தார்.

    • மேற்கு வங்காளத்தின் அரம்பாக் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது சந்தேஷ்காலி பெண்களின் மரியாதை, கண்ணியத்திற்காக பா.ஜ.க. தலைவர்கள் போராடினர் என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாடு பார்க்கிறது. இதனால் நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது.

    சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எல்லா வரம்புகளையும் கடந்தார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடினர். போலீசார் நேற்று அவரை கைதுசெய்ய வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

    • மேற்கு வங்காள மாநிலத்திற்கு வழங்கக்கூடிய நிதியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
    • வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி இறுதி கெடு விதித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் செல்ல இருக்கிறார். பா.ஜனதாவின் பெண்கள் பிரிவு தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிரசார கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    பின்னர் பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், சொத்துகளை சட்டவிரோதமாக பறித்தல் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரான ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் வசித்து வரும் சந்தேஷ்காளி பகுதிக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் மோடியின் வருகைக்காக மேற்கு வங்காள பா.ஜனதாவினர் தயாராகி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தனு சென், பிரதமர் மோடியிடம் மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்பும் விசயங்களை பட்டியலிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சாந்தனு சென் கூறுகையில் "மேற்கு வங்காளத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது நீங்கள் 18 எம்.பி.க்களை பெற்றீர்கள். அந்த எம்.பி.க்கள் டெல்லிக்கு வரும்போதெல்லாம், மேற்கு வங்காள மாநிலத்திற்கான நிதியை கொடுக்காதீர்கள் என்று அவர்கள் பரிந்துரை செய்தார்களா?. அவர்களின் மீது கவனம் செலுத்தி மாநிலத்தின் பல்வேறு திட்டத்திற்கான சுமார் 1.60 லட்சம் கோடி நிதியை நீங்கள் நிறுத்து விட்டீர்களா? என்று மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்புகிறார்கள்.

    மேலும், கடந்த சில வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்து நீங்கள் ஆண்டிற்கு 4.65 லட்சம் கோடி ரூபாயை நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் எடுத்துச் சென்றீர்கள். இதைப்பற்றியும் கேள்வி கேட்க விரும்புகிறார்கள்.

    அதோடு இல்லாமல் சுவேந்து அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய முடியுமா? என்றும் கேட்க விரும்புகிறார்கள். சுவேந்து அதிகாரியின் பெயர் சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ல் உள்ளது. மேலும் 20 எஃப்ஐஆர்-ல் உள்ளது" என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இருந்து பிரிந்து சென்ற சுவேந்து அதிகாரி, அக்கட்சிக்கு எதிராக பா.ஜனதா தலைவராக எதிர்த்து நிற்கிறார்.

    • மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா- திரணாமுல் காங்கிரஸ்க்கு இடையில் நேரடி போட்டி.
    • பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜனதா.

    மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தல் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2 ஆயிரமாக உயர்த்தும். நாம் சமையல் செய்வதற்கு விறகு சேகரிக்கும் பழைய நடைமுறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். அவர்கள் கட்டித்தரவில்லை என்றால் மே மாதத்திலிருந்து மாநில அரசே அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.

    ஒரு இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா? என்று கேட்டேன். சுமார் ₹30,000 கிடைத்ததாக கூறினார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை இதுவாகும். 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 11 லட்சம் வீடுகள் கட்டுக்கொடுக்க இருக்கிறது. இருப்பினும், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் கூறவில்லை.

    • ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கியதால் இச்சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைதுசெய்ததாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் கூறுகையில். ஷேக் ஷாஜகான் 6 ஆண்டு காலம் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    • பெண்கள் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு.
    • பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு.

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கினர். இதனால் இந்திய அளவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    • சந்தேஷ்காளி விவகாரத்தில் ஷேக் ஷாஜகானை திரிணாமுல் பாதுகாப்பதாக குற்றச்சாட்டு.
    • அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டால் வழக்கு போடப்படுகிறது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது. ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. 42 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க மம்தா முடிவு எடுத்துள்ளார். இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது.

    இதனால் மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளனர். தற்போது அங்கே சந்தேஷ்காளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதேச்சதிகார ஆட்சியை நடத்துகிறது என மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறுகையில் "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மேற்கு வங்காளத்தில் எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டால் வழக்கு போடப்படுகிறது. அது பத்திரிகையாளர்கள் இருந்தாலும் கூட. அவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லை. நிருபர்கள் கைது செய்யப்படுகிறாரக்ள். செய்தி ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது." என்றார்.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் ஷேக் ஷாஜகான் பெண்களுக்கு எதிராக தனது கூட்டாளிகளுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களின் சொத்துகளை சட்டவிரோதமாக பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஜகான் பாதுகாப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஷேக் ஷாஜகான் கைதாகாமல் தலைமறைவாக உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்காளத்துக்கு அடுத்த மாதம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
    • மார்ச் 1-ந்தேதி அரம்பக் மற்றும் கிருஷ்ணா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று பல ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் மேற்கு வங்காளத்துக்கும் அடுத்த மாதம் (மார்ச்) செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அங்கு 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மார்ச் 1-ந்தேதி அரம்பக் மற்றும் கிருஷ்ணா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். மீண்டும் மார்ச் 6-ந்தேதி செல்லும் அவர் பா.ஜ.க. மகளிர் அணியினர் நடத்தும் பிரமாண்டமான ஊர்வலத்தில் பங்கேற்கிறார். மார்ச் 7-ந்தேதியும் மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    • மேற்கு வங்காளத்தில் ஐந்து தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்.
    • ஆனால் இரண்டிற்கு மேல் ஒரு தொகுதி கூட வழங்க முடியாது என மம்தா கட்சி திட்டவட்டம்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மக்களைவை தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

    அதனால் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். நாங்களும் தனித்து போட்டியிட தயார் என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

    ஆனால் திரணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே காங்கிரஸ் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது.

    இதனால் இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மம்தா கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டதாகவும், அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும், மேகலயாவில் ஒரு தொகுதியில் போட்டியிடவும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என காங்கிரஸ் நம்பியிருந்தது. ஆனால், அநத் கட்சியின் தெரிக் ஓ'பிரைன், பைனாகூலர் வைத்து பார்த்தாலும் கூட எங்களாக காங்கிரஸ் கட்சிக்கான 3-வது இடத்தை காண முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    மேலும், மம்தா பானர்ஜி அனைதது தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த முடிவில் உறுதியாக உள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

    இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை தகர்ந்துள்ளது.

    ஒருவேளை மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகளை பெற்றுக்கொண்டு அசாமில் இரண்டு இடம், மேகாலயாவில் ஒரு இடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட 3-வது மாநிலமாக மேற்கு வங்காளம் திகழ்கிறது. இங்கு இந்தியா கூட்டணி போட்டியில் அது மேலும் கூட்டணிக்கு வலுசேர்க்கும் என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்புகின்றனர்.

    ×