என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
    • 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    • கடந்த சில நாட்களாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
    • கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்க–ளாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிக–மாகக்காணப்படுகிறது. முக்கியமா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் காய்ச்சல் வழக்க–மாக பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல்தான். இந்த காய்ச்சல் நம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் பரவ–லாக காணப்படுகிறது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இந்த காய்ச்சல் 4 அல்லது 5 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. இருப்பினும் அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, டாக்டரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டுகிறோம். சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வைரஸ் கிருமி–கள் நம் சுவாசப் பாதையில் நுழையாமல் இருக்க, அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். மேலும் கைகளை சோப்புப் போட்டு கழுவவும், சுத்த–மான உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளவும் வேண்டும். சுடு நீரை பருகவேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கும், பொதுவெளிக்கும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
    • இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திபடுகையைச்சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அமுதா (வயது 48). அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வந்துள்ளார். இருந்தும், வயிற்று வலி அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இப்படி வயிற்று வலியால் அவதியுறுவதை காட்டிலும் செத்துவிடலாம் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அமுதா குடித்தார். அப்போது அங்கு வந்தகலியபெருமாள் உடனடியாக தேனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீபமணி துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
    • சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். அவரது மனைவி காத்தம்மாள். இந்த தம்பதியினர் காரைக்கல் கலெக்டர் முகம்மது மன்சூரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    எங்களது மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் என்ஜினியர் படிப்பை முடித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக துபாய்க்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார்.

    அதன்பின்னர், துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவருடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். அங்கு படிப்புக்குரிய வேலை கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பான வேலையை கொடுத்து உள்ளனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் ரூ. 49 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    மேலும் துப்பாக்கி முனையில், அடித்து, உதைத்து அதிக நேரம் கடுமையான வேலை வாங்கி சித்ரவதை செய்து உள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

    எனவே மியான்மர் நாட்டில் தவிக்கும் எங்களது மகனை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    • அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்கள் பலர் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    இந்த காய்ச்சல் குழந்தைகள், சிறுவர்களை அதிகளவில் பாதிக்கிறது. இதனால் கல்வித்துறை புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வருகிற 25-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புதுவை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று அதிகளவு கூட்டம் இருந்தது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளை தூக்கி வைத்து கொண்டு பெற்றோர் குவிந்திருந்தனர்.

    காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்கள் பலர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இதேபோல அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படடோர் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

    காய்ச்சிய குடிநீரை பருகும்படியும், முககவசம் அணியும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 35, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 508, காரைக்காலில் 16 பேர் என 559 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர். நேற்று வரை 38 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

    இன்று அரசு ஆஸ்பத்திரியில் 31, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 165, காரைக்காலில் 19 பேர் என 215 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • 40 பேர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 110 பேராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
    • கடந்த 6½ ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் 1986-ல் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பிள்ளைச்சாவடியில் தொடங்கப்பட்டது.

    150 பேராசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்த கல்லூரியில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு பேராசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 40 பேர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 110 பேராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் கடந்த 6½ ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    பதவி உயர்வு வழங்கப்படாததை தேசிய அங்கீகார குழு ஏற்கனவே சுட்டிகாட்டியும் மாநில அரசு பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தேசிய அளவில் 36 -வது இடத்தில் இருந்த அரசு என்ஜினீயரிங் கல்லூரி தற்போது 150 -வது இடத்திற்கு இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஆனால் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனை கண்டிக்கும் விதமாக பேராசிரியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதனால் 9 துறைகளில் பயிலும் பேராசிரியர்கள் பாடம் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக 3 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வகுப்பிற்கு செல்ல மாட்டோம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் யாரும் இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.

    புதுச்சேரி: 

    காரைக்கால் திருநள்ளாறு அருகே தென்னங்குடி எல்ஜி.ஆர் காலனியில் கஸ்பர் என்பவர் வீட்டில் தீ பிடித்தது. வீட்டில் யாரும் இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்தோர் சுரக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு அதிகாரி அசோக் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். அதற்குள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அற்புதராஜ் வீட்டின் ஒரு பகுதி எரிந்தது. அப்பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது.

    தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டால் மற்ற வீடுகள் காப்பாற்றப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கஸ்பர் வீட்டில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், அற்புதராஜ் வீட்டில் சுமார் 30,000 மதிப்பிலான கீற்று மற்றும் மூங்கில் பொருட்கள் எரிந்து சாம்பலானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார்.
    • தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நிரவி பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி-யில், குருப் பொது மேலாளராகா பணியாற்றும் ஷடானனன்(59) என்பவர், காரைக்கால் பாரதி நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர், கடந்த 3ந் தேதி, தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூர் பட்டேபாடம் எனும் ஊருக்கு, ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார். மீண்டும் கடந்த 15ந் தேதி பகல் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த சிசி கேமராவை காண சென்றபோது, கேமராக்கள் உடைக்கப்பட்டு, அதன் அனைத்து பாகங்களும் திருடு போய் இருந்தது.

    பின்னர், வீட்டில் சென்று பார்த்தபோது, வீட்டு அலமாரிகளில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம், வளையல், தோடு உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை அழைத்து, வீட்டின் பல இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து, வீட்டு பூட்டை உடைத்து, 18 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமத்து தேடிவருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது.
    • தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் வெளிநாட்டில் உள்ள தொலைக்காட்சி அலுவலகம் ஒன்றில் தொலைபேசி அழைப்பாளர் பணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் பேசினார். அவர் கம்போடியா நாட்டில் வேலை இருப்பதாகவும், அங்கு உங்களை அனுப்பி வைப்பதற்கான ஏஜெண்டுகள் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    வேலையில் சேர்த்து விடுவதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் முருகன் கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவரை கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சென்னை ஏஜெண்டுகள் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    புதுச்சேரி இளம்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.4 லட்சம் கேட்ட கும்பல் இறுதியாக ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. தொலைபேசி அழைப்பாளர் வேலையை வழங்காமல் அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை எடுபிடி வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ரூ.2½ லட்சத்துக்கு உன்னை விலைக்கு வாங்கியுள்ளோம் என்று கம்போடியா கும்பல் கூறியுள்ளது. தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் விபசார கும்பலிடம் விற்று விடுவோம். உன்னை அதிக விலைக்கு வாங்குவதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி கம்போடியா கும்பல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது. இதனை அங்கு பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் பார்த்து இளம்பெண் மீது கருணை காட்டியுள்ளார். பின்னர் அவரது உதவியுடன் புதுவை இளம்பெண் பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

    இதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ் குமார் லாலிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி இளம்பெண்ணை முதலியார் பேட்டையை சேர்ந்த வாலிபர் முருகன் மற்றும் சென்னை புரோக்கரான வெளிநாட்டு ஏஜெண்டு ராஜ்குமார் ஆகியோர் திட்டம் போட்டு பணத்துக்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை வாலிபர் முருகனை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஏஜெண்டு ராஜ் குமாரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மோசடிக்கும்பல் இளம்பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா கும்பலிடம் விற்பனை செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஏஜெண்டை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இளம்பெண்ணை சித்ரவதை செய்த கம்போடியா கும்பல் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை இளம்பெண்ணை டாலர் கணக்கில் கம்போடியா கும்பல் விலை பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதன்படி 3500 டாலர் கொடுத்து கம்போடியா மோசடி கும்பல் இளம்பெண்ணை வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள தமிழகம், புதுவை மோசடி கும்பலையும், கம்போடியா நாட்டை சேர்ந்தவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    கம்போடியாவில் இளம்பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அங்கு உள்ள ஒரு நிறுவன மேலாளர் அட்டிடோ மற்றும் ஜான் ஆகியோர் தான் தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு பதிலாக வேறு வேலை கொடுத்து சித்ரவதை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.
    • வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    வைரஸ் காய்ச்சலால் அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் உடல் வலி, சளி, தொண்டை அலர்ஜி, தலைக்கணம் ஆகியவை ஏற்படுகிறது.

    தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.

    பள்ளி மாணவர்களிடையே அதிகளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும் என சுகாதாரதுறை அறிவுருத்தியுள்ளது.

    மேலும், சுகாதாரதுறையின் பரிந்துரையின் அடிப்படையில் புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 26-ந் தேதி முதல் அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளது.

    புதுவை சுகாதாரதுறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உட்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் புதுவை மற்றும் காரைக்காலில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற சிகிச்சைக்கு டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். அந்த வகையில் நேற்று காய்ச்சலுக்கு 190 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இன்று 150 குழந்தைகளும் 30 பெரியவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் இவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

    இதற்கிடையே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • புதுவை கோரிமேடு எல்லைக்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 16 வயது சிறுமியை பல நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலாஜியும், அவரது மனைவியும் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    சுற்றுலா நகரமாக விளங்கும் புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை மற்றும் ஸ்பா என்ற பெயரில் விபசார தொழில் நடந்து வருகிறது.

    இதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் ஆன்லைனில் புக்கிங் செய்து விபசாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை கோரிமேடு எல்லைக்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டுக்கு சில வாலிபர்கள் வந்து செல்வதுமாக இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 16 வயது சிறுமியுடன் ஒரு வாலிபர் தனிமையில் இருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூரை சேர்ந்த பாலாஜி, அவரது மனைவி உமா ஆகியோர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 16 வயது சிறுமியை பல நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலாஜியும், அவரது மனைவியும் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இது தொடர்பாக பாலாஜியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலாஜி கொடுத்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள். விபசாரத்தில் ஈடுபடுத்திய சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    புதுவை நகரின் மத்தியில் அதிக குடியிருப்புகள் உள்ள இடத்தில் பல மாதங்களாக இந்த விபசார தொழில் நடந்து வருவதால் இதற்கு புதுவையில் உள்ள ஒரு சில அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×