search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 People arrested"

    • சாணார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.
    • மினிவேனில் ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரம், நத்தமாடிப்பட்டி,மேட்டுக்கடை,அஞ்சுகுளிப்பட்டி, ஆவிளிபட்டி, கோணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.

    இந்திலையில் சாணா ர்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் நொச்சிஒடைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினிவேனில் 8 ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சாணார்பட்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 40), சிறுமலையை சேர்ந்த பழனிச்சாமி (34), பொன்னகரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (32), இளையராஜா (43) என தெரியவந்தது.

    மேலும் அவர்கள் மினிவேன் மூலம் கிராமங்களில் இரவு நேரத்தில் ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து சாணா ர்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 ஆடுகள், மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர். இந்த ஆடு திருட்டில் இவர்க ளோடு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீடி ஓசி தராத ஆத்திரத்தில் கும்பல் வாலிபர் மற்றும் குடும்பத்தினரை தாகத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை அருகே குத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி(27). கூலித்தொழிலாளி. இவரிடம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(24) மற்றும் அவரது நண்பர்கள் ஓசியில் பீடி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பாண்டி தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் கதவை உடைத்தனர். இதை தடுக்க வந்த பாண்டியின் தந்தை-தாய், உறவினர்களை தாக்கினர்.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அருண்குமார், அஜித்குமார், ஜெகன்நாத் மற்றொரு அஜித்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் ராமன் (23) இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பின்பு உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.

    தகவலறிந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மிதந்த ராமன் உடலை போலீசார் மீட்டனர்.இதில் துர்நாற்றம் அதிகமாக வீசியது. போலீசாருக்கு அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே ராமனை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மொட்டமலைபட்டியை சேர்ந்த குணசேகரன், கார்த்திக் ராஜா, சின்னக் கரந்தி, அம்மணி உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவில் போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள வரட்டுகரை என்ற இடத்தில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த அவிநாசி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 28) வெள்ளகோவில், கரூர் ரோட்டில் ஒரு தனியார் மது பார் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (31) ஓலப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போன்று வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓலப்பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிகாட்டுவலசு என்ற இடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து (60) என்பவரை கைது செய்து கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    இதில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக சிவகிரியில் பங்களாபுதூரை சேர்ந்த சுப்பிரமணி (76), கவுந்தப்பாடியில் பாலக்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து(47), மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதியில் மதுவற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் குடிபோதையில் தாக்கினர்.
    • ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (57). இதே ஊரைச் சேர்ந்த சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர் குமரேசன் (28), மகுடீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் குடிபோதையில் பால்ராஜை தாக்கினர்.

    இதுகுறித்து செம்படி போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் மற்றும் மகுடீஸ்வரனை கைது செய்தனர். அதேபோல் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி போதும் பொண்ணு (48) என்பவரை மணிகண்டன் (33), பெரியசாமி (24) ஆகிய 2 பேரும் குடிபோதையில் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து போதும்பொண்ணு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் பெரியசாமியை கைது செய்தனர். குடிபோதையில் 2 வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மாணவர்களிடமிருந்து இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் காரமடை அருகே பெரியபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காரமடை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரமடை, பெரியபுத்தூர் பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கி டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி (வயது20), சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒத்தகால் மண்டபம் மயிலேரிபாளையத்தை சேர்ந்த சூரியா (19) மற்றும் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியை சேர்ந்த முத்துகுமார் (21) கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 4வது குறுக்கு த்தெருவை சேர்ந்தவர் மனோஜ் (22). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 2 பேர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மறைவான இடத்தில் நின்று கொண்டி ருந்த 2 பேர் மனோஜை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மனோஜ் உயிருக்கு பயந்து கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மனோஜை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சி கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறி த்து தாடிக்கொம்பு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசா ரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் மனோஜ் அரிவாளால் வெட்ட ப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தேவா என்ற திவாகர் (22) என்பவர் ஜோதிபாசு மனைவி உத்ரா (27) என்பவருடன் பழகி வந்துள்ளார். பால் வியாபாரம் செய்துவரும் ஏற்கனவே மனோஜ்டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். திவாகர் பழகுவதை அறிந்ததும் அவர் கண்டித்துள்ளார். இதனால் மனோஜ் மற்றும் தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த தகராறில் தான் மனோஜ் அரிவாளால் வெட்டப்பட்டது உறுதி யானது. இதை தொடர்ந்து தேவா மற்றும் மேற்கு அசோக்நகரை சேர்ந்த ஜான் என்ற ஜானகிரமன் (22), அஜய் (20), உத்ரா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதி மின்மயானம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மாணவர்களை குறி வைத்து காரில் கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நல்லாம்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் சூரிய பிரகாஷ்(32), மோனிஷா(21), அவரது உறவினர்கள் தேவி ஸ்ரீ(28), பத்மா(45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் பத்மா அழகு நிலையம் ஒன்றில் பியூட்டிசியனாக வேலை பார்த்து வருகிறார். 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு கார், மொபட் மற்றும் ரூ. 4,600 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு வந்த புகார்களின்படி நடவடிக்கை

    கரூர்:

    தோகைமலை போலீசாருக்கு வந்த புகார்களின்படி போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப் பட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி(வயது 36). தனது பெட்டிக் கடையில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். இதேபோல் கழுகூர் ஊராட்சி அ.உடையாப்பட்டியை சேர்ந்த காமராஜ்(வயது 59) என்பவரும் தனது கடையில் மது விற்பனை செய்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை(47) என்பவர் தனது வீட்டின் பின்புறமும், தங்கவேல் மனைவி மாரியாயி(41) என்பவர் தனது பெட்டிக்கடையிலும் மதுபானங்களை விற்பனை செய்துள்ளதை பார்த்த போலீசார் மலர்கொடி, காமராஜ், சின்னதுரை, மாரியாயி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
    • அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பெரளிமேடு பகுதியில் வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கவுண்டச்சிபாளையம் துய்யம்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (32), அவல்பூந்துறையை சேர்ந்த ஞானதண்டபாணி (43), சோலார் புதூரை சேர்ந்த செந்தில்ராஜ் (44), குயிலான்தோப்பை சேர்ந்த மாதேஷ்வரன் (38) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
    • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரியகுளம் வடகரை புதிய பஸ்நிலையம் பகுதியில் அதேபகுதிையசேர்ந்த சூர்யா மற்றும் பசீர்அகமது ஆகியோர் குடிபோதையில் அங்கிருந்த பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதேபோல் வடகரையை சேர்ந்த மரியபால்தினகரன், மற்றும் ஜோசப் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அரண்மனைத்தெருவில் உள்ள மாரிச்செல்வம் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அவரது செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். இவர்கள் 4 பேரிடமும் விசாரணை செய்ததில் அனைவரும் நண்பர்கள் என தெரியவந்தது.

    மேலும் 2 பேராக வெவ்வேறு பகுதிகளில் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    இதனைதொடர்ந்து போலீசார் அவர்கள் 4 ேபரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களையும், பறிமுதல் செய்தனர். பின்னர் அவ்ர்கள் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×