search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    செம்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் கைது

    • சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் குடிபோதையில் தாக்கினர்.
    • ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (57). இதே ஊரைச் சேர்ந்த சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர் குமரேசன் (28), மகுடீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் குடிபோதையில் பால்ராஜை தாக்கினர்.

    இதுகுறித்து செம்படி போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் மற்றும் மகுடீஸ்வரனை கைது செய்தனர். அதேபோல் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி போதும் பொண்ணு (48) என்பவரை மணிகண்டன் (33), பெரியசாமி (24) ஆகிய 2 பேரும் குடிபோதையில் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து போதும்பொண்ணு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் பெரியசாமியை கைது செய்தனர். குடிபோதையில் 2 வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×