search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  கஞ்சா விற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
    X

    கோவையில் கஞ்சா விற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

    • சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதி மின்மயானம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மாணவர்களை குறி வைத்து காரில் கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நல்லாம்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் சூரிய பிரகாஷ்(32), மோனிஷா(21), அவரது உறவினர்கள் தேவி ஸ்ரீ(28), பத்மா(45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் பத்மா அழகு நிலையம் ஒன்றில் பியூட்டிசியனாக வேலை பார்த்து வருகிறார். 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு கார், மொபட் மற்றும் ரூ. 4,600 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×