என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தம் அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது
- போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் ராமன் (23) இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பின்பு உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மிதந்த ராமன் உடலை போலீசார் மீட்டனர்.இதில் துர்நாற்றம் அதிகமாக வீசியது. போலீசாருக்கு அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே ராமனை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மொட்டமலைபட்டியை சேர்ந்த குணசேகரன், கார்த்திக் ராஜா, சின்னக் கரந்தி, அம்மணி உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்