search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் என்.சி.சி. மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம்
    X

    காரைக்காலில் என்.சி.சி. மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம்

    • என்.சி.சி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
    • முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி;

    காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் 8 நாட்கள் நடைபெறும் என்சிசி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இப்பயிற்சி முகாமை என்சிசி கமாண்டிங் அதிகாரி கர்னல் எல்.கே.ஜோஷி தொடங்கி வைத்தார். இம்முகாமில் ராணுவப் நடை பயிற்சி, துப்பாக்கியை பிரித்தல், மீண்டும் கோர்த்தல் மற்றும் சுடுதல் பற்றிய பயிற்சி, துப்புரவு பணி, தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    முகாமின் நிறைவில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கேம்ப் பையர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×