என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் புதுவை தங்கும் விடுதியில் தற்கொலை
    X

    சென்னையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் புதுவை தங்கும் விடுதியில் தற்கொலை

    • சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்த்.
    • இடமாற்றம் செய்ததால் சென்னையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் புதுவை தங்கும் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 57). இவர் அங்குள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வரும் அலுவலகத்திலேயே அவரது மனைவி லட்சுமியும் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையே ஆனந்தை பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆனந்த் புதுவை புதிய பஸ் நிலையம் அருகே மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று மதியம் விடுதி ஊழியரிடம் அறை எடுத்து தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு வேண்டுமா? என்று கேட்டு வரும்படி மானேஜர் பாபு அறிவுறுத்தினார்.

    அதன்படி விடுதி ஊழியர் ஒவ்வொரு அறையாக சென்று வாடிக்கையாளர்களிடம் மதிய உணவு வாங்கி தருவது குறித்து கேட்டு வந்தார்.

    அதன்படி ஆனந்த் தங்கிய அறைக்கு சென்று விடுதி ஊழியர் கதவை தட்டிய போது அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர் மானேஜர் பாபு உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ஆனந்த் கழிவறை நுழைவு வாயிலில் சிமெண்ட் கட்டையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் விசாரணையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஆனந்த் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி ஆனந்தின் மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் புதுவைக்கு விரைந்து வருகிறார்.

    Next Story
    ×