என் மலர்
டெல்லி
- காலிறுதி போட்டிகள் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன.
- அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகின்றன.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்தன.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திராவும், பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசமும், சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தராகண்டும், டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் முன்னேறின.
முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.
காலிறுதி போட்டிகள் அனைத்தும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன. அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.
- ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (பிப்ரவரி 3) முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும்.
தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுமார் ரூ.100 கோடி வீதம் இந்த மெகா திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்கி வந்தது.
- இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்கினால் சீனா இங்கு தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும்.
2026-27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.
பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய சபஹார் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வீதம் இந்த மெகா திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்கி வந்தது.
ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
சபஹார் துறைமுகத் திட்டத்திற்காக அமெரிக்கா வழங்கியிருந்த பொருளாதாரத் தடை விலக்கு வரும் ஏப்ரல் 26 உடன் முடிவடைகிறது.
இதனால் இந்தியா இத்திட்டத்தில் தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.
மேலும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள், அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த தாக்குதல் மிரட்டல் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்கினால் சீனா இங்கு தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் சுங்க வரி மற்றும் பிற வரிகளில் செய்துள்ள மாற்றங்களால் சில பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்:
செல்போன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் மீதான இறக்குமதி வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
17 முக்கிய புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்காக்கும் 7 மருந்துகளுக்கு வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 20%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள் இறக்குமதி வரி குறைப்பால் விளையாட்டுப் பொருட்களின் விலை குறையும்.
சோலார் பேனல்கள், லித்தியம் பேட்டரி பாகங்கள், சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள், நீரிழிவு தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் வரி குறைகிறது.
சர்வதேச கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்கள், அணு மின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், மைக்ரோவேவ் அடுப்புகள் ஆகியவற்றுக்கு அடிப்படை சுங்க வரி (BCD) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, கல்விக்கான பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா தொடர்பான TCS வரி விகிதம் 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் படிப்புச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.
விலை உயரும் பொருட்கள்:
சிகரெட் மற்றும் பீடி, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட இதர புகையிலை பொருட்கள் மீதான NCCD வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள் ஆகியவை விலையும் உயருகின்றன.
இறக்குமதி செய்யப்படும் சில வகை மதுபானங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில குறிப்பிட்ட ஆடம்பர இறக்குமதி பொருட்களின் விலை உயரக்கூடும்.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பத்திர பரிவர்த்தனை வரி (STT) அதிகரிக்கப்பட்டுள்ளதால், பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.
- ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு.
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த பாதுகாப்பு துறைகான நிதி கடந்த ஆண்டை விட 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பு பட்ஜெட்டில், ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்த ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ.1.80 லட்சம் கோடியை விட 21.84% அதிகமாகும்.
ராணுவப் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கு ரூ.3,65,478 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இறக்குமதி செய்யப்படும் விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதியாண்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்டவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட் பெரும் உந்துதலாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடன் மோதல் ஆகியவற்றால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
- புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட்டில் வருமான வரி குறித்த முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
ITR-1 மற்றும் ITR-2 வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31-ஆம் தேதியும், தணிக்கை தேவைப்படாத வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கானTax Collected at Source (TCS), 5% லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி முறையின்படி, ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை 0 வரி, 4 லட்சம்-8 லட்சம் வரை 5% வரி, 8 லட்சம் - 12 லட்சம் வரை 10% வரி, 12 லட்சம் - 16 லட்சம் வரை 15% வரி, 16 லட்சம் - 20 லட்சம் வரை 20% வரி , 20 லட்சம் - 24 லட்சம் வரை 25 % வரை, 24 லட்சத்திற்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்.
இதுதவிர DATA CENTRE டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விடுமுறை (Tax holiday) அளிக்கப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம், 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி நீக்கம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் மூலம் ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும், இதற்காக TDS பிடிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு இனி முதலீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.41 லட்சம் கோடியாக இருந்தது.
- மொத்தமாக திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1,82,094 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி வரி வசூல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.2 சதவிதம் அதிகரித்து ரூ.1,93,384 கோடியாக உள்ளது.
கடந்த மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.41 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதிகள் மீது வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 10.1 சதவீதம் உயர்ந்து ரூ. 52,253 கோடியாக இருந்தது.
மொத்தமாக திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது. பணத்தைத் திரும்பப் பெறுதல்களைக் கணக்கில் கொண்ட பிறகு ஜனவரி மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.70 லட்சம் கோடியாக இருந்தது.
ஜனவரியில் செஸ் வரி வசூல் (புகையிலைப் பொருட்களில் இருந்து) ரூ.5,768 கோடியாக இருந்தது.
- சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.
- இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரத்யேகமான அரிய கனிமவள மண்டலங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும்.
சுரங்கம் தோண்டுதல், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இவை அமைக்கப்டுடுகிறது.
பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இந்த அரிய கனிமவள மண்டலங்கள் மூலமாக நம் நாட்டிலேயே கனிம சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.
கனிமங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை உற்பத்தி செய்வது, அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.
அரிய வகை கனிமங்கள் மின்சார வாகனங்களின் மோட்டார்கள், காற்றாலைகள், ஸ்மார்ட்போன்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உபகரணங்களைத் தயாரிக்க மிக அவசியமானவை.
எனவே பட்ஜெட் அறிவிப்பு உள்நாட்டிலேயே கனிம உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.
- மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.
இதனிடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
- சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். மேலும் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.
தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 81,506 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகள் சரிந்து 25,029 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.
- மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* பயணிகள் விமான உறுதிபாகங்களுக்கான இறக்குமதி வரி இனி இல்லை.
* கலால் மற்றும் சுங்க வரி விதிப்பு நடைமுறை எளிமையாக்கப்படும்.
* கலால் வரியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம்.
* 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.
* மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.
* காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்கப்படும்.
- வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வரி குறித்து இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
* வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை கிடையாது.
* வருமான வரி கணக்கு, மறு ஆய்வுக்கு பிறகும் ரிட்டர்ன் தொடர்பாக மறுமுறை விண்ணப்பிக்கலாம்.
* வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.
* மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.
* குறைந்த அளவில் வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.






