என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
    • முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வாஸ்திரத்தை கொண்டு வர உள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

    இந்நிலையில் திருப்பதி கோவிலில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது. தங்கக்கொடி மரத்தில் இருந்த வளையம் கழன்று விழுந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • வைர கிரீடம், வைர பொட்டு வைத்து அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    ஆந்திர மாநிலம், இந்திர கிளாத்திரியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    மும்பையை சேர்ந்த சவுரப் என்பவர் ரூ.2.50 கோடி மதிப்பில் வைரத்திலான கிரீடத்தையும், ஐதராபாத் கொண்டாபூரை சேர்ந்த சூரியகுமார் என்பவர் வைரத்திலான பொட்டும், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வைரம் பொறிக்கப்பட்ட சூரியனையும் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினர்.

    வைர கிரீடம், வைர பொட்டு மற்றும் வைரம் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கி உள்ளது.
    • வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து, திருப்பதி கோவிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என்றும் எங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை" என்று மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கி உள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளதை அடுத்து வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

    • ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது.
    • தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 736 சில்லறை மது விற்பனை கடைகள் உருவாக்கப்படுகிறது. இந்த கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது.

    இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபானக கொள்கை திட்டத்தின்படி அரசுக்கு ரூ.5500 கோடி வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும். அதில் ரூ.99 மற்றும் அதற்கும் குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் 1-ந்தேதி முதல் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் கடைகள் ஒதுக்குவது குறித்த நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் வருகிற 12-ந்தேதி மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்பட்டு ரூ.99-க்கு கிக்கான மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்கத்துடன் காத்திருந்த மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இன்னும் 10 நாட்கள் குறைந்த விலை மதுவுக்கு காத்திருக்க வேண்டுமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார்.
    • பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.

    அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு நடந்து சென்றார். பவன் கல்யாணை கண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.

    திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.

    இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    • பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.
    • லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து ஆந்திரா துணை முதல் மந்திரி பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.

    அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு நடந்து சென்றார். பவன் கல்யாணை கண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.

    அப்போது பவன் கல்யாண் போலீஸ் அதிகாரிகளிடம் நடைபாதையில் சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா மற்றும் காயமடைந்த சிறுவன் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நடைபாதையில் வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதையடுத்து நடைபாதையில் உள்ள கடைசி படிக்கட்டில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தார். தரையில் படுத்து வணங்கினார்.

    பின்னர் விருந்தினர் மாளிகையில் தனது மகன் அகிரா நந்தன், மகள் ஆத்யா, திரைப்பட இயக்குனர் திரிவிக்ரம் ஆகியோருடன் இரவு தங்கினார். இன்று காலை 8 மணிக்கு மாத்ரு ஸ்ரீ தரி கொண்டா வெங்கமாம்பாவை தரிசனம் செய்தார்.

    பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.

    இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பவன் கல்யாண் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார்.

    லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறவில்லை.

    விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் நீதிபதிகள் அவ்வாறு கூறியிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.நெய் கலப்படம் குறித்த ஆய்வக அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதிகளில் சில குழப்பங்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.

    இது குறித்து தெளிவு படுத்தப்படும்.மேலும் கடந்த 5 ஆண்டுகளில் லட்டு மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விதிமீறல்களை முன்னெடுத்துக் கொண்டு செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம்.
    • பவன் கல்யாண் வேங்கடேச பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருந்து வருகிறார்.

    நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

    திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் கருத்து வெளியிட்டது ஏன்? லட்டு சர்ச்சை குறித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது என்றால் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

    மேலும், திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் அரசியல் கூடாது. சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?

    கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான பதிலே இல்லை. பிரசாதத்தில் கலப்படம் இருப்பது உறுதியாக தெரியாத நிலையில் கருத்து வெளியிட்டது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர். கடவுள் விவகாரத்தில் ஆந்திர அரசு அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வேங்கடேச பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருந்து வருகிறார். இன்று விரதத்தை முடித்துக் கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்யவுள்ளார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், "திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறவில்லை. நெய் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட தேதி குறித்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதை நாங்கள் தெளிவுபடுத்தி விடுவோம்.

    கடந்த 5-6 வருடங்களாக கோவில்கள் அவமதிப்பு செய்யப்படுகின்றன. சுமார் 219 கோயில்கள் இழிவுபடுத்தப்பட்டன. ராமதீர்த்தத்தில் ராமர் சிலை சேதப்படுத்தப்பட்டது. எனவே, இது ஒரு பிரசாதம் பற்றிய பிரச்சினை அல்ல.

    இந்தியா முழுவதும் உள்ள கோவில்களை பாதுகாக்க சனாதன தர்ம பரிக்ஷனா அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு வருகிறேன். பரிகாரம் முடிந்த பிறகு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று தெரிவித்தார்.

    • பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
    • சீனிவாச ராவ் எம்.எல்.ஏ.வின் நடத்தையால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், சித்தேலாவை சேர்ந்தவர் கோலிகாபுடி சீனிவாச ராவ். இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சி திருவூர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சீனிவாச ராவ் அதே பகுதியை சேர்ந்த பெண்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    மேலும் செல்போனில் ஆபாச வார்த்தைகளை பேசியதால் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவரது நடத்தையால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சித்தேலாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண்களுக்கு ஆபாச வீடியோ, படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வரும் சீனிவாச ராவ் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும். சீனிவாச ராவை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    சீனிவாச ராவ் எம்.எல்.ஏ.வின் நடத்தையால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கட்சி பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
    • தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல தடை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. கருட சேவை தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக கருட சேவை நாளன்று தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதியில் நிறுத்தலாம் என்பது குறித்து அறிவதற்காக கியூ.ஆர் குறியீடு பொருத்தப்பட்ட பலகைகளை ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    அதன்படி அலிபிரி பாரத வித்யா பவன், நேரு மாநகராட்சி பள்ளி மைதானம், விநாயகா நகர் குடியிருப்பு, எஸ்.வி வைத்திய கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றுலா பஸ்கள் உயிரியில் பூங்கா சாலையில் உள்ள தேவ லோக் மைதான த்திலும், பைக்குகள் பாலாஜி இணைப்பு பஸ் நிலையத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களை அறிவதற்காக ரூயா, கருடா, கூடலி, பாலாஜி லிங்க் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கியூ.ஆர் குறியீடு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.


    கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் அவற்றை சென்றடையும் வழிகள் பற்றிய விவரங்கள் கொண்டவை கியூ.ஆர் குறியீட்டில் உள்ளது.

    பக்தர்கள் கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை.
    • புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நகரி:

    திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா கூறியதாவது:-

    இந்துக்களை ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும்.

    இந்த விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவர வேண்டும்.

    புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பக்தி பூர்வமான உணர்ச்சிகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல் உதவி மையம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது.
    • சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதை வழியாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பாதையில் உள்ள காவல் உதவி மையம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது.

    இதனை கண்ட தேவஸ்தான பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாடிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

    ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் தற்காப்புக்காக கைத்தடிகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்று முதல் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஸ்ரீவாரி மற்றும் பாதை மூடப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும். பக்தர்கள் தனித்தனியாக நடந்து வர வேண்டாம். மேலும் வரும் வழியில் உணவுகளை நாய்களுக்கு வைக்க வேண்டாம்.

    இதனால் நாய்கள் அங்கேயே தங்கி இருக்கும். இந்த நாய்களை வேட்டையாட சிறுத்தைகள் அடிக்கடி மலை பாதைக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 84 ஆயிரத்து 66 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 29, 044 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ. 4.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது.
    • நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

    நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது. கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டன.

    நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் சிறுத்தை பயமின்றி நடைபாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்தது.

    இதனைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்தியது. இதனால் சிறுத்தை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

    மீண்டும் நடைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று 71,133 பேர் சாமி தரிசனம் செய்தனர். 35,502 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ×