என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வான்கோழி பிரியாணி எப்படி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். வான்கோழி வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வான்கோழி - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1 கப் (துருவியது)
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 5

    மசாலாவிற்கு...

    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் - 2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த வான்கோழியை போட்டு அதனுடன், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சுவையான வான்கோழி வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அ‌ரி‌சி - 2 கப்
    ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
    பெரு‌ங்காய‌த்தூள் - ‌ சி‌றிதளவு
    எ‌ள் - 1 டீஸ்பூன்
    தே‌ங்கா‌ய் துருவ‌ல் - கா‌ல் க‌ப்
    வெ‌ண்ணெ‌ய் - சிறிதளவு
    உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய் - தேவைக்கு



    செய்முறை:

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அரிசி தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்ப குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சுவையான சத்தான சாதம் இது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
    ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து ஆறவைத்து கொள்ளவும்.

    ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடானதும், மிளகுத்தூளைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

    இதனுடன் ஆறவைத்த சாதம், ஸ்வீட் கார்ன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட ரவா கிச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
    நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - அரை கப்
    மஞ்சள் தூள், மிளகு தூள் - சிறிதளவு
    சீரக தூள், தனியாத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    ரொட்டித்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான் மிளகு சாதம் செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    காளான் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

    காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு சூப்பரான உணவு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
    மைதா - 2 கப்,
    பொடித்த சர்க்கரை - 2  டீஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

    பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    விரும்பினால் மேலே சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறலாம். மைதாவிற்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 8
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×