என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
தோசை, நாண், சப்பாத்தி, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிரைடு காளான் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 250 கிராம்
மைதா மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.
அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.
வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.
காளான் - 250 கிராம்
மைதா மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.
அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.
வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.
சூப்பரான பிரைடு காளான் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் பஜ்ஜியும் ஒன்று. மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ இந்த மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 10
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொண்டை கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கலக்கிக் கொள்ளுங்கள்.
பஜ்ஜி மிளகாயை கீறி அதற்குள் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பஜ்ஜி நல்ல சுவையுடனும், காரசாரமானதாகவும் இருக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை, கரைத்து வைத்துள்ள மாவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கொண்டைக்கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 10
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
உப்பு, மஞ்சள், பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொண்டை கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கலக்கிக் கொள்ளுங்கள்.
பஜ்ஜி மிளகாயை கீறி அதற்குள் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பஜ்ஜி நல்ல சுவையுடனும், காரசாரமானதாகவும் இருக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை, கரைத்து வைத்துள்ள மாவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பஜ்ஜி மிளகாய் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்
திக்கான தேங்காய் பால் - 1 கப்
பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
நெய் - 50 மில்லி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை
வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்
திக்கான தேங்காய் பால் - 1 கப்
பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
நெய் - 50 மில்லி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை
வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.
சுவையான ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அத்திப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காய்ந்த அத்திப்பழத்தை வைத்து சுவையான தித்திப்பான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து
நெய் - கால் கப்
பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
பால்பவுடர் - முக்கால் கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
அலங்கரிக்க
குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும்.
மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.
நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
இதில் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
5 நிமிடம் விடாமல் கிளறவும்.
இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.
காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து
நெய் - கால் கப்
பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
பால்பவுடர் - முக்கால் கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
அலங்கரிக்க
குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்.
வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும்.
மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.
நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
இதில் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
5 நிமிடம் விடாமல் கிளறவும்.
இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.
சூப்பரான அத்திப்பழ அல்வா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அப்பளம் வத்த குழம்பு அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6

செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.
அப்பளம் வத்த குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோளம், மோர், உப்பு, சர்க்கரை, ஜெலப்பினோ மற்றும் செடர் சீஸ் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து பேக் செய்யப்படும் இந்த ஸ்நாக்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோளம் - 1 கப் மஞ்சள்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மோர் 1 கப்
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு
செடர் சீஸ் - கால் கப் துருவியது
ஜெலப்பினோ - 1-2 மேஜைக்கரண்டி

செய்முறை
ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.
மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.
சோளம் - 1 கப் மஞ்சள்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மோர் 1 கப்
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு
செடர் சீஸ் - கால் கப் துருவியது
ஜெலப்பினோ - 1-2 மேஜைக்கரண்டி
உருகிய அன்சால்ட்டட் பட்டர் - 1/4 கப்

செய்முறை
ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.
மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.
சூடான ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பூண்டு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - கால் கிலோ
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய் - 60 மி.லி.கிராம்
மஞ்சள் தூள் - 3 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு

செய்முறை
சிக்கன் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப,மிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சிக்கன் - கால் கிலோ
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய் - 60 மி.லி.கிராம்
மஞ்சள் தூள் - 3 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
கரம் மசாலா - 5 கிராம்.

செய்முறை
சிக்கன் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப,மிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் பூண்டு வறுவல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது சாம்பார், சட்னி போதவில்லை என்றால் சட்டென பருப்பில்லாமல் திடீர் சாம்பாரை வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஐந்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - நான்கு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் .
நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஐந்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - நான்கு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் .
நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திபெத்தியர்களின் பாரம்பரிய உணவு மோமோஸ். இந்த பாரம்பரிய ரெசிபியை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாவு பிசைய
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பூரணம் செய்ய :
சிக்கன் - 300 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
மிளகு உடைத்தது - 1/4 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும். உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக உதிர்த்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.
மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிடவும்.
ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டி தடுவில் தட்டையாக செய்துகொள்ளவும்.
செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் நடுவில் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.
இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும்.
அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.
15 - 20 நிமிடங்களுக்கு வேக வைத்து பரிமாறவும்.
மாவு பிசைய
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பூரணம் செய்ய :
சிக்கன் - 300 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
மிளகு உடைத்தது - 1/4 டீஸ்பூன்

வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும். உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக உதிர்த்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.
மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிடவும்.
ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டி தடுவில் தட்டையாக செய்துகொள்ளவும்.
செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் நடுவில் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.
இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும்.
அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.
15 - 20 நிமிடங்களுக்கு வேக வைத்து பரிமாறவும்.
சூப்பரான சுவையான சிக்கன் மோமோஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் ஆலூ கோப்தா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - ஒன்றரை கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 2 ,
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு,
வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
ஏலக்காய் - ஒன்று,
உப்பு - சிறிதளவு,
தக்காளி - ஒன்று

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.
இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.
பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
காளான் - ஒன்றரை கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 2 ,
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு,
வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
ஏலக்காய் - ஒன்று,
உப்பு - சிறிதளவு,
தக்காளி - ஒன்று

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.
இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.
பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான காளான் ஆலூ கோப்தா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் அட்டகாசமான சுவையில் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்ஸ் - 500 கிராம்
சோள மாவு - அரை கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தேன் - 5 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
பார்பிக்யூ சாஸ் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள் - சிறிதளவு

செய்முறை:
வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி கிளற வேண்டும்.
சிக்கன் விங்ஸ் - 500 கிராம்
சோள மாவு - அரை கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தேன் - 5 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
பார்பிக்யூ சாஸ் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி கிளற வேண்டும்.
அடுப்பை அனைத்து தட்டில் பரிமாறி அதன் மேல் வறுத்த எள்ளை தூவினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காய்கறிகள் சேர்ந்து சூப்பரான போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
(மேல் மாவுக்கு)
கடலை மாவு - 1 கப்
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு.
(பூரணத்துக்கு)
உருளைக் கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
பட்டாணி - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது

செய்முறை:
கொத்தமல்லி, காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெள் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
அத்துடன் காய்கறிகளையும், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.
காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள்.
பிறகு கடலை மாவுடன் சிறிது உப்பு ஆப்ப சோடா (விருப்பப்பட்டால்) கலர் பவுடர் தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
(மேல் மாவுக்கு)
கடலை மாவு - 1 கப்
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு.
(பூரணத்துக்கு)
உருளைக் கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
பட்டாணி - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கொத்தமல்லி, காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெள் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
அத்துடன் காய்கறிகளையும், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.
காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள்.
பிறகு கடலை மாவுடன் சிறிது உப்பு ஆப்ப சோடா (விருப்பப்பட்டால்) கலர் பவுடர் தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






