என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான அப்பளம் வத்த குழம்பு
Byமாலை மலர்29 April 2020 10:23 AM GMT (Updated: 29 April 2020 10:23 AM GMT)
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அப்பளம் வத்த குழம்பு அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.
அப்பளம் வத்த குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X