என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
காளான் ஆலூ கோப்தா
Byமாலை மலர்23 April 2020 10:26 AM GMT (Updated: 23 April 2020 10:26 AM GMT)
பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் ஆலூ கோப்தா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - ஒன்றரை கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 2 ,
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு,
வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
ஏலக்காய் - ஒன்று,
உப்பு - சிறிதளவு,
தக்காளி - ஒன்று
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.
இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.
பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
காளான் - ஒன்றரை கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 2 ,
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு,
வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
ஏலக்காய் - ஒன்று,
உப்பு - சிறிதளவு,
தக்காளி - ஒன்று
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.
இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.
பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான காளான் ஆலூ கோப்தா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X